பக்கம் எண் :

மனோன்மணீயம்
102

தொட்டில்தா லாட்ட,அவ் இட்டமாம் முன்னோர்
தீரமுஞ் செய்கையும் வீரமும் பரிவும்
எண்ணி யிருகணுங் கண்ணீர் நிறையக்
கண்டுயி லாதுநீர் கனிவுடன் கேட்ட
115.வண்டமிழ் மொழியால் மறித்திக் காலம்
“ஆற்றிலம் ; ஆண்மையு முரிமையு மொருங்கே
தோற்றனம்” எனச்சொலத் துணிபவர் யாவர்?

படைகள்.

சிச்சீ !


ஜீவ,பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன்
படியே யுலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று
120.“அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு !

படைகள்.

ஹே ! ஹே !


ஜீவ,கோட்டமி லுயிர்போ கூறீர், அன்ன
நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்?

படைகள்.

சிச்சீ ! சிச்சீ !


ஜீவ,சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நுந்
திருவனை யார்களுஞ் சேய்களுங் கொண்ட
125.வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும்
பாஷாபி மானமும், தேசாபி மானமும்
பொருளெனக் கருதா தருணிறை நுமது
தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல்
ஆண்மையுஞ் சுதந்தரக் கேண்மையு மொருங்கே
130.நிந்தைவஞ் சியர்செய வந்தநுங் கோபம்
முற்று மியல்பே. மற்றுதன் குகையுள்
உற்றரி முகமயிர் பற்றிடி னதற்கக்
குறும்பா லெழுஞ்சின மிறும்பூ தன்றே !
உரிமைமே லாண்மைபா ராட்டார் சாந்தம்,
135.பெருமையில் பிணத்திற் பிறந்தோர் சீதம்.
அந்தணர் வளர்க்குஞ் செந்தழல் தன்னிலும்
நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ
யன்றோ வானோர்க் கென்றுமே யுவப்பு !