பக்கம் எண் :

மனோன்மணீயம்
103

வந்தவிக் கயவர்நுஞ் சிந்ததையிற் கொளுத்திய
140.வெந்தழற் கவரே யிந்தன மாகுக !

படைகள்.

ஆகுக ! ஆகுக !


ஜீவ,இன்றுநீர் சிந்து மிரத்தமோர் துளியும்,
நின்றுகம் பலவு நிகழ்த்துமே “இந்தப்
பாண்டிய ருரிமை பாராட்டும் பண்பினர் ;
தீண்டன்மின் திருந்தலீர் ! அவர்தஞ் செருக்கு.
145.சுதந்தர மவர்க்குயிர் : சுவாசமற் றன்று.
நினையுமின் நன்றாய்க் கனவினு மிதனை.”
எனமுர சறையுமே யெத்திசை யார்க்கும்.
இத்தனிப் போரினீ ரேற்றிடுஞ் காயஞ்
சித்தங் களித்து, ஜயமா துமக்கு
150.முத்தமிட் டளித்த முத்திரை யாகி
யெத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும் !

படைகள்.

ஜே ! ஜே !


ஜீவ,போர்க்குறிக் காயமே புகழின் காயம்.
யார்க்கது வாய்க்கும் ! ஆ ! ஆ ! நோக்குமின் !
அனந்தந் தலைமுறை வருந்தனி மாக்கள்,
155.தினந்தினந் தாமனு பவிக்குஞ் சுதந்தரந்
தந்ததம் முன்னோர் நொந்தபுண் ணெண்ணிச்
சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர்,
என்றா லப்புண் ‘இறந்துகோட் டக்கது’
அன்றோ? அறைவீர். ஐயோ ! அதுவும்
160.புண்ணோ? புகழின் கண்ணே. எவரே
புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்?
புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்?
கணங்கணந் தோன்றிக் கணங்கணம் மறையும்
பிணம்பல. இவரெலாம் பிறந்தா ரென்பவோ !
165.உதும்பர தருவி லொருகனி யதனுட்
பிறந்திறு மசக மிவரிலுங் கோடி.
பிறந்தா ரென்போர் புகழுடன் சிறந்தோர்.
அப்பெரும் புகழுடம் பிப்படி யின்றிதோ !