பக்கம் எண் :

மனோன்மணீயம்
104

சுலபமாய் நுமக்கெதி ரணுகலால்,, துதித்துப்
170.பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம்.
ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல்
அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு
இத்தினம் அடையு மிணையிலாப் பெரும்புகழ்
எத்தனை யாயிர மாயிரங் கூறிட்
175.டொத்ததோர் பங்கே யுறுமெனக் கெனவே
யோடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள் !
நீடுபோர் குறித்தவண் நின்றோர் தம்முள்
யாரே யாயினுஞ் சீராந் தங்கள்
உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச்
180.சஞ்சல மெய்துவோ ருண்டெனிற் சாற்றுமின்.
வஞ்சக மில்லை.என் வார்த்தையீ துண்மை.
மானமோ டவரையிம் மாநக ரதனுட்
சேமமா யின்றிருத் திடுவம். திண்ணம்.
உத்தம மாதர்க ளுண்டுமற் றாங்கே
185.யெத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம்.

படைகள்.இல்லை ! இல்லையிங் கத்தகைப் புல்லியர் !

ஜீவ,குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு
சிறிதா மெனவுனிச் செப்பினோம். அதனாற்
பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை.

படை,தலைவர்.இல்லையெம் மிறைவ ! இந்நா டதனுள்
இல்லையத் தகையர்.

யாவரும்.

இலையிலை ! இலையே !


ஜீவ,நல்லதப் படியே. நாமே நுஞ்சுய
நாட்டினல் லுரிமைபா ராட்டும் பெரிய
195.மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின் ! விஜய
இலக்குமி காத்திருக் கின்றாள் ! அன்றியும்
ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று
ஓய்கிலள் நோன்புநந் தாய்மனோன் மணியே.

(2)