பக்கம் எண் :

மனோன்மணீயம்
109

உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா
வந்தபோ ரன்றிஃ தூர்ப்போர். அதனால்
இதோஅங் கெய்தினோர் யாரே யாயினுஞ்

55.

சுதேசாநு ராகத் தொடாப் லன்றிப்
பலவாந் தமது பழம்பழி மீட்போர்
கொலைபா தகஞ்செயுங் கொடுயை ரேயாம்

(நாராயணன் படைக்கோலமாகிக்குதிரையின்மேல்வர.)

2-ம் படை.
நாராயணன்.

பாரும் ! பாரும் ! நாரா யணரிதோ-
உன்பெயர் முருக னன்றோ?


முதற்படை, 

அடியேன்.


4-ம் படை, 60.என்பெயர் சாத்தன், சுவாமி !

நாரா, 

ஓகோ !

எத்தனை பேருள ரிவ்வாயி லின்கண்?

முதற்படை,

பத்தைஞ் ஞாறுளர். மெத்தவும் உத்தமர்.
மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தந்
தகுதிக் கேற்ப தன்றிக் காவல்.


நாரா,65.

பொறு ! பொறு ! முருகா ! புரையற் றோர்க்குமற்
றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும்
சிறுமையும் பெருமையுஞ் செய்பவர்க் கன்றிச்
செய்வினை தனகெது? மெய்ம்மையில் யாவுந்
திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு.


2-ம் படை.70.

வேணுமென் றாயினு மெங்களை விடுத்தல்
நாணமு நோவுமாம் நாரா யணரே !


நாரா,

வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ !
அப்படி யேதா னாயினு நமக்குக்
கைப்படு கடமையே கடமை -

முருகா !

75.எத்தனை பேரா லேலுமிக் காவல்?

முதற்படை,

நாலிலொன் றாயின் சாலவு மிகுதி.


நாரா,

அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின்
இத்தனை பேர்க்குள தொழிலெலாந் தம்மேல்