பக்கம் எண் :

மனோன்மணீயம்
110

ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக்

80.

காட்டுதி யெனக்கு.


முதற்படை,

காட்டுவன் ஈதோ !

(அணிவகுத்துக் காட்ட)


நாரா,(தனதுள்)

நல்லனித் தலைவன். வல்லவ ரிவரும்.


முதற்படை,ஈதோ நின்றனர் ! 

(காவற்படைகளை விலக்கி நிறுத்திக் காட்ட)


நாரா,

போதுமோ இவர்கள்?


முதற்படை,

போதும் ! போதும் !


காவற்படைகள்.

போதுமே யாங்கள் -


நாரா,

எண்ணுமின் நன்றா யேற்குமுன் ! பின்புநீர்

85.பண்ணுந் தவறுநம் பாலாய் முடியும்.

காவற்படை.

தவிர்கிலங் கடமையில். சத்தியம். தலைவ !


நாரா,

தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க
மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?


காவற்படை,

மொழியோ மொன்றும். மொழியோ நும்மேல்.


நாரா,90.

சரி ! சரி ! ஆயின் தாங்குமின் காவல்.
பரிமற் றையர்க்கெலா முளவோ?


3-ம் படை,

ஓகோ !

4-ம் படை,பெரியதென் பரிபோற் பிறிதிலை.

நாரா,

காணுதும்.

அணிவகுத் திவ்வயி னமர்மின் ! முருகா !
மற்றை வாயிலிலும் மாற்றியிவ் விதம்யான்
95.

வைத்துள படையும் அழைத்திப் புறநீ
நொடியினில் வருதி.


முதற்படை,

அடியேன், அடியேன்.

(முதற்படைஞன் போக)


நாரா,

ஆம்பொழு தழைப்போம். வாம்பரி யமர்மின்.

(கோட்டைமே லுலாவி நின்று)


(தனதுள்)

அரும்படை யிரண்டு மதோ ! கை கலந்தன.
வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ?

100.

ஆவதிங் கறியேன் ! ஜீவக ! ஜீவகா !