பக்கம் எண் :

மனோன்மணீயம்
111

முற்றுநா னறிவன்நின் குற்றமுங் குணமும்.
குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்?
வித்தையு முன்பெருஞ் சத்திய விருப்பமும்
உத்தம வொழுக்கமு மெத்துணைத் தையோ !
105.வறிதாக் கினையே வாளா அனைத்தும்
அறியா தொருவனை யமைச்சா நம்பி !
இன்னதொன் றன்றிமற் றென்பிழை யுன்னுழை?
மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல
என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?
110.வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத்
தீத்திற லொருவன் சேர்க்கையால் வீதல்
மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே !
சுதந்தர மறுவோர்க் கிதந்தீங் குண்டோ?
கூறுவோ ரறிவின் குறைவே ; வேறென்?
115.அன்றியு முன்மிசை நின்றிடும் பெரும்பிழை
ஆயிர மாயினுந் தாய்மனோன் மணிநிலை
கருதுவ ருன்னலங் கருதா தென்செய்வர்?
வருவது வருக ! புரிகுவம் நன்மை.

(2-ம் படைஞனை நோக்கி) முருகன் வரவிலை?

2-ம் படை,

வருவன் விரைவில்.


நாரா,120.அதுவென் ஆ ! ஆ !

2-ம் படை,

ஆ ! ஆ ! அறியேம் !


நாரா,பலதே வன்படை யலவோ?

2-ம் படை,

ஆம் ! ஆம் !


நாரா,மன்னவன்?

2-ம் படை,

 நடுவே.


நாரா,

வலப்புறம்?


2-ம் படை,

குடிலன்.


நாரா ;என்னையிக் குழப்ப மிடப்புறம்?

2-ம் படை,

ஏதோ !