நான்காம் அங்கம் 5-ம் களம். இடம் : அரண்மனையிலொரு சார். காலம் : மாலை. |
ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை. |
| சுந்தரர். | | வளையும்வேய் நிமிரும் ; வளையா நெடுமரங் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்! |
| ஜீவகன். | | முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம்! களைகுவர், களைகிலர் காழ்பெறுந் தருக்கள். |
| 5. | சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும் பேணுவ ரதனைப் பெரியோர்! யாரே காணுவர் காழறு நாணமில் நாணலை? ஒருயிர்ப் பேனு முண்டே லடிகாள்! |
| 10. | போரிடைப் போக்குவன் ; புகழெனக் கதுவே! |
| சுந்தர, | | பொறு பொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்! அரியது செய்வதே யாண்மையும் புகழும்! அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி. வேட்டையோ ரோட்டிட வெருவுதீக் குருவி |
| 15. | நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் தனதுகண் காணாத் தன்மையர் பிறருந் தனதுடல் காணா ரெனநினை வதுபோல் என்னையிம் மயக்க மன்னவ! உனக்கும்! சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர் ; |
| 20. | அறவழி யிதுவென அறியாக் கயவர் ; பிறர்பொருளை வௌவியம் பிறவுயிர் கவர்ந்தும் அலையுந் தீமைய ரநேகர், அகப்படின் மலைவற மரணமும் வெருவார் மான, |
|
|
|