| 25. | சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம் அறிகுறி பலவா லாய்ந்தறிந் தாற்றுந் திறமுள வூகமே யோகம் : அன்றி |
(நட்சத்திரங்களை நோக்கி) | | வான்கா டதனில் வறிதே சுழலும் மீன்காள்! வேறு முளதோ விளம்பீர்? |
| 30. | மதியிலா மாக்கள் விதியென நும்மேற் சுமத்துஞ் சுமையுந் தூற்றுஞ் சும்மையும் உமக்கிடு பெயரு முருவமுந் தொழிலும் அமைக்குங் குணமும் அதில்வரு வாதமும், யுக்தியு மூகமும் பக்தியும் பகைமையும், |
| 35. | ஒன்றையும் நீவி ருணரீர்! - அஃதென்? வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ! இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால் வருந்தொறுஞ் சிலமொழி வருவ, அஃதோ திரும்பினன்! ஒதுங்குவதும். தெரிந்துமேற் செல்குவம். |
| | (புருடோத்தமன் தனியா யுலாவிவர) |
| புரு,(பாட. | உண்ணினைவி லொரு பொது மோய்வின்றிக் கலந்திருந்து | | | முயிரே யென்றன் | | | கண்ணிணைக ளொருபோதுங் கண்டிலவே நின்னுருவங் | | | காட்டாய் காட்டாய். | (1) | | அவத்தைபல வடையுமன மனவரதம் புசித்திடினு | | | மமிர்தே யென்றன் | | | செவித்துளைக ளறிந்திலவே தித்திக்கு நின்னாமஞ் | | | செப்பாய் செப்பாய். | (2) | | பொறிக ளறியாதுள்ளே புகும்பொருள்க ளிலையென்பர் | | | பொருளே யுன்னை | | | யறியவவா வியகரணம் அலமாக்க வகத்திருந்தா | | | யச்சோ வச்சோ. | (3) |
குடில, (தனிமொழி) | 40. | மனிதன லனிவன்! புனிதகந் தருவன்! தேவரு முளரோ? யாதோ? அறியேன். இருளெலா மொளிவிட இலங்கிய வுருவம் |
|
|
|