| | மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு உருவிலை யென்பர். - ஓசையு முருவும்! - |
| 45. | பாடிய பாட்டின் பயனென்? அஃதோ! நாடி யறிகுதும். நன்று நன்று. |
| | (புருடோத்தமன் திரும்பி வர) |
| புரு,(பாட. | புலனாரக் காண்பதுவே பொருளென்னும் போதமிலாப் | | | புன்மை யோர்க்கிங் | | | குலவாதென் னுளநிறையு முனதுண்மை யுணர்த்தும்வகை | | |  . | யுண்டே யுண்டே. | (4) | | . | பெத்தமனக் கற்பிதமே பிறங்குநினை வெனப்பிதற்றும | | | பேதையோர்க் கோர் | | | யத்தனமற்றிருக்க வென்னு ளெழுமுனது நிலையுரைப்ப | | | தென்னே யென்னே. | (5) | | தேர்விடத்தென் னுள்ளநிறை தெள்ளமுதே யுன்னிலைமை | | | தேரா திங்ஙன் | | | ஊர்விடுத்தும் போர்தொடுத்தும் உனையகல நினைத்ததுமென் | | | னூழே யூழே. | (6) |
| குடில, | | சேரனே யாமிது செப்பினோன்.-போரினில் ஒருபுற மொதுங்கி யரசனை யகற்றி நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன். |
| 50. | ஒன்றனு கூல முரைத்தான். நன்றே ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும். எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை. நண்ணுதும் நெருங்கி. நல்லது! திரும்பினன். |
| | (புருடோத்தமன் திரும்பிவர) |
| புரு.(தனிமொழி) | | என்றுங் கண்டில மின்றுகண் டதுபோல், |
| 55. | எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்! இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக் கௌவையி னாழ்ந்தனை போலும்.-ஐயோ! |
| (குடிலனை நோக்கி) | | ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்! |
| குடில, | | அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை! |
|
|
|