பக்கம் எண் :

மனோன்மணீயம்
153

புரு.
குடில,
60.

வந்ததென் இருள்வயின்? வாளிடென் னடியில்!
வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை
சேர்ந்துன் னமையந் தேர்ந்து தொழுதுஓர்
வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி
வந்தன னடியேன் : தந்தது தெய்வம்

65.

உன்றன் திருவடி தரிசன முடனே!
சிந்தையெப் படியோ வப்படி யென்செயல்!


புரு.செப்புதி விரைவில். செப்புதி வந்தமை!

குடில,

ஒப்பிலா வீர! எப்புவ னமுநின்
மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி

70.

நீவரு முனமே நின்வசப் பட்டுத்
தாவரு மின்பந் தடையறத் துய்ப்பப்
பாக்கியம் பெற்றிலம் பண்டே யென்றுனி
யேக்கமுற் றிருந்ததை யானெடு நாளா
யறிந்துளன். இன்றுநீ யாற்றிய போரிற்

75.

செறிந்திரு படையுஞ் சேர்தரு முனமே
முறிந்தியா மோடிய முறைமையுஞ் சிந்தையிற்
களிப்படை யாமலே கைகலந் தமையும்
வெளிப்படை யன்றோ? வேந்த! இப் புவியோர்
வெல்லிட மும்வெலா இடமும் யாவும்

80.

நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்?
வேசையர் தங்க ளாசையில் முயக்கம்
அன்றோ இன்றவ ராற்றிய போர்முறை?
என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்!
நின்புகழ் மயக்கா மன்பதை யுலகம்

85.

யாண்டு மின்றெனில், அணிதா மிந்தப்
பாண்டியு நின்பாற் பகைகொளத் தகுமே!
ஒருவா றறமே யாயினும், மருவாக்
கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை
மற்றவர் மனநிலை முற்ற வறிந்தபின்

90.

கருணையோ காய்தல்? தருமநல் லுருவே!


புரு.(தனதுள்)
(குடிலனை நோக்கி)
யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம்.
வேண்டிய தென்னை யதனால்? விளம்புதி.