பக்கம் எண் :

மனோன்மணீயம்
154

குடில,

ஆண்டகை யறியா ததுவென்? இன்று
மாண்டவர் போக மீண்டவ ரேனும்

95.

மாளா வழிநீ யாளா யென்னக்
கைகுவிப்ப தேயலாற் செய்வகை யறியா
அடியே னென்சொல! ஆஆ! விடியில்
வாளா மாளும் மனிதர் தொகுதி
யெண்ணி யெண்ணி யெரிகிற தென்னுளம்.

100.

எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு
புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ?
வதுவை முற்றுறா வயவரெத் தனையோ?
புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ?
நொந்த சூலினர் நோவுபா ராது

105.

வந்திவ ணடைந்த மள்ளரெத் தனையோ?
தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு
சேய்முக மறவாச் செருநரெத் தனையோ?
செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத்
துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ?


புரு.110.

சரி, சரி! இவையுன் னரசர்க் காங்கு
சாற்றா தொழிந் ததென்?


குடில,

சாற்றிலன்?

போற்றான் யார்சொலும் புந்தியுஞ் சற்றும்.
அன்பிலன் : பிறர்படுந் துன்பஞ் சிறிதும்
அறியா வெறியன். அன்பொ டிம்மாலை

115.

குறியா நீவிடு தூதையுங் கொண்டிலன்.
அண்டிய ஜீவ ராசிக ளனைத்தையும்
மண்டம ரிதில்நின் வைவாள் தனக்கே
யிரையிட லொன்றே விரதமாக் கொண்டனன்.
பித்த னொருவன் தன்னா லித்தமிழ்.

120.

நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே.
ஆவ! இப்பெரும் பாவமும் பழியும்
அஞ்சினேன் ; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை
யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல்
ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி