| 125. | அரசனும் புரிசையு மரைநொடிப் போதிலுன் காதல மாமொரு கௌசலம், காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே! |
| புரு.(தனதுள்) | | பாதகா! விசுவாச காதகா! |
| குடில, | | அரசன் கைப்படி லாங்குளார் யாருமென் |
| 130. | உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர். மங்கல மதுரையு மிங்கிவர் வழியே யுன்னா ணைக்கீ ழொதுங்குதல் திண்ணம். தொல்புவி தோற்றியது தொட்டா சுரிமை மல்கிய புவியிஃததனால், “மன்னவன்” |
| 135. | என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும், நின்னாணை யின்கீழ் நின்றுநீ முன்னர் வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற் றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில், சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக் |
| 140. | கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம். பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவர றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன். |
| புரு. | 145. | சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்? |
| குடில, | | அரசன தந்தப் புரமது சேர யாவரு மறியா மேவருஞ் சுருங்கை ஒன்றுள தவ்வழி சென்றிடி லக்கணங் கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி. |
| | மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்? |
|
|
|