| அருள், | | அடியேன்! |
| புரு, | | கைத்தளை காற்றளை கொடுவா நொடியில், |
| | (அருள்வரதன் போக) |
| (குடிலனை நோக்கி) | | எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை? |
| குடில, | | அணிதே! அஃதோ! சரணம் புகுந்த |
| | |
| 155. | எளியேற் கபய மியம்புதி யிறைவ! |
| புரு, | | அவ்வழி யோநீ யணைந்தனை? |
| குடில, | | ஆம்! ஆம்! |
| | செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே |
| | காட்டுவ னடியேன். |
| | (அருள்வரதனுஞ் சேவகரும் விலங்குகொண்டுவர) |
| | |
| புரு, (குடிலனைச்சுட்டி) | | பூட்டுமின்! நன்றாய்! |
| குடில, | | ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்? |
| | |
| 160. | மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை! |
| | (அருள்வரதன் விலங்கு பூட்ட) |
| புரு, | | எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்! |
| | சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்! |
| குடில, | | (அழுது) தேடியே வந்து செப்பிய வடியேன் |
| | ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி |
| | |
| | 165. | முந்தியே தந்திடில் - |
| புரு. | | மூடுநின் பாழ்வாய். |
| | சேரன் விஜயமுந் திருடான். அறிகுதி. |