பக்கம் எண் :

மனோன்மணீயம்
156

அருள்,

அடியேன்!

புரு,கைத்தளை காற்றளை கொடுவா நொடியில்,

(அருள்வரதன் போக)

(குடிலனை நோக்கி)எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை?
குடில,அணிதே! அஃதோ! சரணம் புகுந்த
155.எளியேற் கபய மியம்புதி யிறைவ!
புரு,அவ்வழி யோநீ யணைந்தனை?
குடில,

ஆம்! ஆம்!

செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே
காட்டுவ னடியேன்.

(அருள்வரதனுஞ் சேவகரும் விலங்குகொண்டுவர)

புரு, (குடிலனைச்சுட்டி)

பூட்டுமின்! நன்றாய்!

குடில,ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்?
160.மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை!

(அருள்வரதன் விலங்கு பூட்ட)

புரு,எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்!
சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்!
குடில,(அழுது) தேடியே வந்து செப்பிய வடியேன்
ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி
 165.முந்தியே தந்திடில் -
புரு.

மூடுநின் பாழ்வாய்.

சேரன் விஜயமுந் திருடான். அறிகுதி.
(சேவகரை நோக்கி) சூரர் பதின்மர் சூழுக விருபுறம்!
(குடிலனை நோக்கி) நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்!

எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே!

(2)

(யாவருஞ் சுருங்கை நோக்கிப் போக)

ஐந்தாம் அங்கம் : முதற்களம்

முற்றிற்று.