பக்கம் எண் :

மனோன்மணீயம்
157

ஐந்தாம் அங்கம்

இரண்டாம் களம்

இடம் : கன்னிமாடத் தொருசார். காலம் : யாமம்.

சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி யிருக்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)


கிழவி.

எதுக்குமிவ் விளக்கு மிச்சிறு செம்பும்
ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில்.


முதற்றோழி.

என்னடி கிழவி! சொன்னா லறிகிலை.
போம்வழி யறியோம்! போமிட மறியோம்!

5.

மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ!
மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி!
காது மில்லை! கண்ணு மில்லை!
ஏது மில்லை! ஏனுயி ரிருப்பதோ!


கிழவி,கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு!
10.

படும்போ தறிவை! இப் படியே பண்டு
முன்னொரு சண்டையி லுன்னைப் பெறுமுன்
ஓடினோம் -


முதற்றோழி.

போடீ! உன்கதை யறிவோம்.

(கிழவி போக)

சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே!

(நகைக்க)


2-ம் தோழி.அம்மணியென் செய்தாள்? அக்காள்! அதன்பின்.
15.‘அப்படி யரசன் மீண்டான்.’ செப்பாய்!

முதற்றோழி.

எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபா
டய்யோ! அத்துயர் தெய்வமே யறியும்!
மன்னவன் வாசல் கடந்தா னெனுமுனந்
தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும்

20.

அருகுள செவிலியும் யானுமாய் விரைவில்
தாங்கினோம், பாங்குள அமளியிற் சேர்த்தோம்.
மூச்சிலை ; பேச்சிலை ; முகமெலாம் வெயர்வை.