பக்கம் எண் :

மனோன்மணீயம்
158

இட்டகை யிட்டகா லிட்டவப் படியே.
இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்!

25.

தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி
ஏங்கினோம், தியங்கினோம்;பாங்கிருந் தழுதோம்.


2-ம் தோழி.

ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர
பட்டபா டெதுவோ! கட்டம்! கட்டம்!


முதற்றோழி.

விதியிது! அலதிது கதையிலு முளதோ?

30.

நொந்தபுண் ணதனிலே வந்திடும் நூறிடி.
தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து
மகிழ்ச்சி காட்டினள், வந்ததித் தளர்ச்சி.
மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய்.


2-ம் தோழி.

எத்தனை வேதனை! எத்தனை சோதனை!

35.

யாது மறியாட் கேதித் துணிபு?
ஓதிய கட்டுரை யொருமுறை யினியும்
நவிலுதி யக்காள்!


முதற்றோழி.

நங்கைநன் மொழியென்

செவியிடை யினியும் மணிபோல் திகழும்!
அரசனை யடிபணிந் தொருசா ரொதுங்கி

40.

நீக்கமி லன்பு மூக்கமுங் களிப்புங்
காட்டிய மதிமுகங் கோட்டியே நின்ற
தோற்றமென் கண்ணின் மாற்றுத லரிதே!
“என்னோ இதற்கும் யோசனை யெந்தாய்!
கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா

45.

நீதிநம் பரலெனில் நேர்வது ஐயமே.
ஏததற் கையம்? இதுவிட் டடிமை
பெயர்வது பெரிதல. பேருல கதற்குத்
துயர்வரு மெல்லைநந் துயர்நோக் குதலோ
பெருமை! அண்ணிதே முனியிடம்! கருதிய

50.

பிரிவோ ஒருதினம்! குருவுந் தந்தையுஞ்
சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப்
பாதா தரவே போதா தோதுணை?
ஆயினு மத்தனை யவசிக மாயின்,
ஆகுக வாஞ்ஞைப் படியே! தடையிலை.