பக்கம் எண் :

மனோன்மணீயம்
159

55.

அன்னையு நின்னை யன்றிவே றறியேன்.
உன்னதே யிவ்வுடல். உன்திரு வுள்ளம்
உன்னிய படியெலா முவப்பச் செய்குவன்.
அடிமையின் கவலையா லரசர்க் கியல்பாங்
கடமையிற் பிறழுங் கலக்கம் விலக்குவை!

60.

அன்பாம் உன்பா லைய! உன்மகள்
வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.”


2-ம் தோழி,

மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ!
இதுவெலாங் காணவோ எழுதினன் பிரமன்?


முதற்றோழி.எதுவெலாங் காணவோ இருப்ப திக்கண்?

2-ம் தோழி.65.என்செய் கின்றன ளிப்போ தேழை?

முதற்றோழி.

வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை!
ஏதோ வெழுது கின்றனள். வாணி
கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல்.


2-ம் தோழி.

நீரா டினளோ விந்நிசி?


முதற்றோழி.

ஆம்! ஆம்!

70.

எழுந்து வாசநீ ராடி முன்சுரத்
தழுந்திய வன்றுதா னணிந்தவெண் பட்டினைக்
கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து
நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி,
அன்றிரா வணிந்தமுத் தாரமு மணிந்து,

75.

நின்றுதன் னிலையெலாம் ஆடியில் நோக்கி,
‘நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி!
அன்றுபோ லன்றோ வின்றென் னிலைமை!’
என்று சிறுமுறு வலித்தனள். என்சொல!
உருவமு முடையு முரையு நடையுஞ்

80.சருவமும் பாவனை பண்ணியும் -(அழ)

(மனோன்மணியும் வாணியும் வர)


2-ம் தோழி.

அஃதோ!

வந்தனள். காணுதி. வாணியும் பின்னுளள்.
மறைகுவ மவ்வறை. வருகவிவ் வழியே!

(தோழிமார் போக)