17. இதில் வரும் பழமொழி இன்மைப்பொருள்தர வழங்குவது. பசுவன்றி எருதீனாதென்க. ஈனுதல் பசுவே யன்றி எருதன்றென்க. 25. இயம்புகோ - இயம்புவேன். 28-29. எட்பூ ஏசியநாசியாய் - என் மலரிலும் சிறந்த மூக்குடையவளே! பெண்கள் நாசிக்கு எட்பூ உவமை. 35. இடும்பை - துன்பம், இன்னல். 38. இது மூர்க்கனும் முதலையும் கொண்டதுவிடா என்னுங் கருத்தது. 43. கைரவம்-ஆம்பல் 46. வள்ளை-வள்ளையிலை, காதுக்குவமைப் பொருள். 47. வெம்மொழி - கொடுஞ்சொல். 50. ஒருவர் - நடராஜர். 59. [ஒக்குமோ - ஒப்பரோ] 66. பெட்பு - ஆசை. 75. கண்டோ - கற்கண்டோ, காரிகை யணங்கு - காரிகையாகிய அணங்கு, மிகவும் அழகுடையவள். ஒருபொருட் பன்மொழியுமாம். 87. வற்கலை - வலியவுடை மரவுரி. 89. சிந்துரம் (வடசொல்) - சிவப்பு. 90. வாரிசம் (வடசொல்) - தாமரை. 100. கதுவும் - பற்றும். 107-108. [சக்கரம் இருத்திடயந்திர ஸ்தாபனஞ் செய்ய.] 110. வடதளவுதரவாணி - ஆலிலை போல் பரந்த வயிற்றையுடைய வாணியே. 112. வாசிட்டாதி - வாசிட்டம் + ஆதி, வசிட்ட முனி செய்த (நூல்). வைராக்கியம் - இன்ப உலகத்தை வெறுக்கச் செய்வது. 119-120. ஆமையின் புறச் சார்பு அலவனொதுங்குவது ஏயும் - ஆமை புறவடிக்கும் அலவன் முழந்தாளுக்கும் உவமை என்றது குறித்து. 126. பிச்சி - பித்தி, பைத்தியக்காரி. 125. நச்சினேன் - விரும்பினேன். 132. அயிராவதத்தன் - இந்திரன், அயிராவத மென்னும் வெள்ளையானை யூர்ந்து செல்பவன். 133. அனிச்சம் - மெல்லிய பூ. இது பெண்களடி மென்மைக்குவமை. நெரிஞ்சில் - நெரிஞ்சிமுள். 135. அஞ்சனம் (வடசொல்) - மை:கண்ணிடுமை. கஞ்சனக் கதுப்பு - கண்ணாடிபோன்ற கன்னம், (வடமொழித்தொடர்) 139. அணங்குறல் - வருந்தற்க. சுணங்கு - தேமல். பொன் - இலக்குமி, தங்கம். 140. முகை முகிழ்த்தல் - பூத்தல். [தாமே நட்டு வளர்த்த முல்லை பூக்குங்கால் இராஜ கன்னியர்க்கு விவாகம் நேரிடு மென்பது காவிய வழக்கு.]வல்லை - விரைவு. 146. துச்சம் - அற்பம், புன்மை, வெறுக்கத்தக்கது. 148. சந்தம் (வடசொல்) - அழகு. 152. துன்று இரா - நெருங்கிய இருள். தோகாய் - உவமை யாகு பெயர், தோகை என்பதின் விளி. [இக்களத்தில் மன்மதோபாலம் பனமும் கேசாதிபாத வருணனையும் ஒருவாறு வந்தமை காண்க.] முதல் அங்கம் மூன்றாம் களம் 8. நறை - தேன், வாசனை, ஆர் - நிறைந்த. தார் - மாலை. 14. ஓவல் - இடையறுதல். உஞற்றுமின் - செய்யுங்கள், மின் ஈன்று ஏவற்பன்மை.
|