17. அழுக்காறு - பொறாமை, அழுக்கறு என்னும் பகுதி நீண்டு தொழிற் பெயராயிற்று. 25. சினகரம் - கோவில், மனோகரம் - மனத்தைக் கவர்தல். 26. உய்ப்பினும் - செலுத்தினும். உய் - பகுதி. 29. முசிப்பு - முடிப்பு. 32. சிட்ட - கற்றறிவுடைய. 33. புரந்தான் - இந்திரன், கரந்து - மறைந்து. 36. ஒவ்வும் - பொருந்தும். 39. கைப்பிள்ளை - சிறு பிள்ளை, கை - சிறுமை. 39. [இதன்பின் வரும் வெண்பா, உண்மைத் துறவியாகிய முனிவர் மேல் குடிலன் அவமே பொருளாசை ஆரோபித்ததைப் பழித்து நாராயணன் செவியறிவுறுத்தும் துறையாகக் கூறும் கூற்று.] கோற்றொடி - அழகிய வளையலணிந்த பெண். பார்த்திபன் - அரசன், பாரை விளங்கச் செய்பவன். 51. அறத்தாறு - அறநெறி. 53. அரந்தை - துன்பம். 56. வதுவை - திருமணம். 59. சீலம் - ஒழுக்கம். 60. சாலவும் - மிகவும். 64. இடியேறு - ஆணிடி, பேரிடி. 65. அடு - கெடு, கொல். 70. தொழும்பு - அடிமை. 73. வியர்த்தம் (வடசொல் - வி + அர்த்தம்) - வீண், பயனற்றது. 77. நேராள் - உடன்படாள். 84. திரைத்தது - சுருங்கிற்று. 87. வாழ்தும் இவ்வயின் - இவ்விடம் வாழ்வோம். 95. [இவ்வரிக்குப் பின்வரும் வெண்பாவில் 'சோற்றதற்கா' என்னும் தனிச்சொல் சகடனைக் குறிக்குங்கால் 'சொற்றதற்கா' என்பதின் நீட்டல் விகாரமாய் அவனது தவறா மொழியையும் சுட்டி நிற்கின்றது.] 104. பொருவரும் - ஒப்பற்ற, 110. பூவை - நாகணவாய்ப்புள். 117. பாற்கல் - கூழாங்கல் 129. இதம் - நன்மை, இனிமை. 133. [இராச்சிய தந்திரத்து - இராச்சிய காரியங்களில்.] 149. நளினம் - தாமரை 152. குமுதவாய் விண்டு - செவ்வாம்பல் மலர் போன்ற வாயைத்திறந்து. 153. குயிலின் மிழற்றி - குயில் போற் பேசி. 156. மந்திரம் - வீடு. 158. கண்படுமெல்லை - துயில் கொள்ளும்போது, தூங்கும் போது. 163. நாலி - முத்து. 165. கட்டழல் - கண் + தழல் - நெருப்பு. 166. ஒல்கும் - தளரும். 169. அயினிநீர் - ஆலத்தி நீர். பூதி-விபூதி, திருநீறு. 173. இழுது - நெய். 178. கங்குல் - இருள். 180. சிரசிரா - சிரசு + இரா - தலையிருக்க மாட்டா, தலைத் தண்டனை வரும். 182. நிமித்திகர் (வடசொல்) - சோதிடர், குறி கூறுவோர். 183. பெண்ணையந்தார் சூடிட - பனம்பூ மாலையைச் சூடும்படி. 184. பெண்ணை - மகளை. அம்தார் சூட்டென - அழகிய மாலையைச் சூடும்படி செய்யென, அதாவது, வஞ்சி யரசனுக்கு மணம் செய்து கொடுமின் என. 203. அங்கணம் (வடசொல்) - முற்றம். [இக்களத்தில் கனாக்கண்டு, காமங்கொண்ட மனோன்மணியின் காம சுர வருணனை ஒருவாறு வந்தமை காண்க.]
|