ளாகப் பலந் தந்தும், தருமராச்சியமென்ற தனிப் பேர்கொண்ட செந்திரு வாழு மெல்லையாகிய சேரதேசத்தை யாள்வோனாகிய புருடோத்தம னென்னும் தன் னிகரில்லாத் தலைவனையன்றி, நினது கற்பகப் பூங்கொடியாகிய மனோன்மணி மணந்து சுற்றத் தகுந்த கற்பகத்தரு வேறொன்றுமில்லை என்பது. 202. இடுக்கண் - துன்பம். [இக்களத்தில் வாணியின் காதல் நிலைமை வாணியின் வாசகத்தால் வருணிக்கப்படுகிறது.] முதல் அங்கம் ஐந்தாங் களம் 1. சத்தி - வலிமை. 3. பெட்பு - விருப்பம். 9. கற்றை - ஒன்று சேர்ந்தது. 19. அயர்த்தோம் - மறந்தோம். 39. மாறன் - பாண்டியன் 40. இறுமாப்பு - செருக்கு. 47. [அரசனைப் போர்க்களத்தில் தானே சூதாகக் கொலைபுரிய உட்கொண்ட குடிலன் கருத்தை அவாய் நிலைப் பொருளால் இவ்வரி உணர்த்துகின்றது.] 50. உற்பவம் (வடசொல்) - தோற்றம். 52. இந்து இரவி - சந்திரன் சூரியன், மதி கதிர். 66. சுவானம் (வடசொல்) - நாய். 67. குக்கன் (வடசொல்) - நாய். 75. இணையறு - ஒப்பற்ற. 78. உதாரம் (வடசொல்) - தயானத்துவம். 88. [புண்ணியம்போல - போலிப் புண்ணியமாக.] 99. மேதினி - உலகு. [இக்களத்தில் குடிலன் துர்க்குணம் அவனது மொழிகளாலேயே விளக்கப்படுகிறது.] கலித்துறை நிதனம் - அழிவு. தனு கரணம் - உடம்பு கருவி. [முதலங்கம் முடிவில் வருங் கலித்துறை அவ்வங்கத்துள் நடந்த கதையைத் தொகுத்துக் கூறி, ஞானபரமாகப் பொருட்படுத்துகிறது. மதுரையாகிய கூடஸ்தநிலை தவிர்ந்த ஜீவகனாகிய ஜீவன் நெல்வேலியாகிய அன்னமயாதி பஞ்சகோச சரீராபிமானத்தால் குருவாசகமாகிய அருள்வழி விடுத்துக் குடிலனாகிய மாயா வசத்தனாய்த் துக்கத்திற் காளாகின்றான் என்பது குறிப்பு.] இரண்டாம் அங்கம். முதற் களம். 2. பொறையன் - சேரன். 3. மருமான் - மருமகன். 4. மன்றல் - திருமணம். 9. மந்திரம் - ஆலோசனை, சூழ்ச்சி். 1-9. இவ்வடிகளில் ஜீவக வழுதி குடிலனுக்குப் பயந்து சுந்தர முனிவர் தன்னிடம் கூறியவற்றைக் குடிலன் தனக்குக் கீழ்ப்பட்ட பதவியில் இருப்பவனா யிருந்தும் தன்னின் மேம்பட்டவனாகக் கருதி அவனிடம் கூறுகின்றான். 12. பரிசு - தன்மை, விதம். 14. அற்றம் - சமயம், காலம். 19. காண்டகும் - பார்க்கத்தக்க (அழகு வாய்ந்த) 20. மாண்ட - மாட்சிமைப்பட்ட, மாண் - பகுதி.
|