|
நாளாக
எனக்குத் தூக்கமே யில்லை. பட்டணமெல்லாம்
இளவரசரைக் காணோமென்று குழப்பமாகி எல்
லோரும் நம்மைக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்
அவர் எங்கே யென்று. அப்பா ! சற்று இந்த இருட்டி
லாவது நித்திரை செய்வோம்.
[படுத்துக்கொள்ளப்
பார்க்கிறான்.]
|
வன்.
|
[ உள்ளே
யிருந்து ] ஆம் ! சந்தேகமில்லை, நான் தான் மஹாராஜா !
|
விக.
|
ஐஐயோ !
இந்தப் பயித்தியம் இங்கே இருக்கிறதையா ;
அதோ தூரத்தில்வருகிறதே ! - அடடா! மஹாராஜாவின்
ஆடையா பரணங்களை யெல்லாம் அப்படியே மாட்டிக்
கொண்டிருக்கிறதே! தூரத்தில் வித்தியாசமுந் தெரிய வில்லையே
! -இது யார் இந்தப் பக்கம்?
வசந்தசேனை
விரைந்து வருகிறாள்.
|
வனை.
|
விகடா !
|
விக.
|
அம்மணி !
|
வனை.
|
மஹாராஜா எங்கே யிருக்கிறார்?
|
விக.
|
இதோ வருகிறாரே, சாக்ஷாத் மஹாராஜா !
எதிர்புறமாக சிரித்தவண்ணம் வசந்தன் வருகிறான்.
|
வனை.
|
[ அவன்
மீது பாய்ந்து ] புருஷோத்தம ராஜனே !
[கட்கத்தை ஓங்கி ]
இனி பத்மாவதியுடன் சுகமாய் வாழும் !
[குத்திக் கொல்கிறாள். வசந்தன்
வீழ்ந் திறக்கிறான். ]
|
விக.
|
அம்மணி !
அம்மணி ! என்ன வசந்தரைக் கொன்று
விட்டீரே !
அமிர்தகேசரி
வருகிறான்.
|
அ.
|
ஐ ஐயோ ! வசந்தர் இறந்து விட்டாரே !
|
வனை.
|
ஆம், ஆம் ! வசந்தன் தான் ! சந்தேகமில்லை ! கேசரிவர்மன்
சொன்னது நிறைவேறிவிட்டது ! இனி நானிருப்ப
பானேன்?-பொறு, மனோஹரா ! ஆ ! நீ என்னைக்
|