பக்கம் எண் :

30குறள் காட்டும் காதலர்

காதல் இத்தன்மையானது என்பதையும், அலருக்கு அஞ்சாத
வகையில் மனத்தில் மாறுதல் ஏற்படுவதையும் இது புலப்படுத்துகிறது.
இந்த உண்மை தெரிந்தால் ஊரார் அலர் தூற்றாமல் விட்டு
விடுவார்களாம். பிரிவுத் துன்பத்தை மறப்பதற்கு உதவியாக-- உயிர்
நிற்பதற்கு உதவியாக--உள்ள அலர் இருப்பது தன் 'பாக்கியம்' என்று
எண்ணுகிறான் காதலன். ஊராரின் அறியாமை அவனுடைய
பாக்கியமாம். 'அதனைப் பலர் அறியார் பாக்கியத்தால்' என்கிறான்.