பக்கம் எண் :

4குறள் காட்டும் காதலர்

யான்நோக்குங் காலை
நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (குறள், 1094)

இருவரும் ஒருமுறை நேருக்குநேர் பார்க்க நேர்ந்தது. அவனும்
நோக்கினான்; அவளும் நோக்கினாள். ஒத்த தன்மையான அந்தப்
பார்வையிலே ஒரு நிறைவு ஏற்பட்டது; அவன் மகிழ்ந்து
எண்ணுகிறான். "கண்ணோடு கண்கள் பார்க்கும் பார்வை ஒன்றுபட்டு
விட்டால், அதற்குமேலவாயால் சொல்ல வேண்டியது என்ன உள்ளது?
வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை."

கண்ணோடு கண்ணிணை
நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல. (குறள், 1100)