பக்கம் எண் :

42குறள் காட்டும் காதலர்

யும் இருமுனைகளில் தன் மெலிந்த உயிர் தாங்கி வருந்தும்
நிலைமை இரண்டு பக்கமும் இரு வேறு சுமைதாங்கி வருந்தும் கொம்பு
(கா) போன்றது என்று உணர்கிறாள். "ஆனால் தெருவில் காவடியைச்
சுமந்து செல்பவனுடைய உடல் வலிமையானது; அவனுடைய தோள்
அவற்றைத் தாங்க முடிகிறது. என் உடம்பு மெலிந்தது; துன்பத்தைத்
தாங்க முடியாததாக உள்ளது. இவ்வாறு காதலும் நாணமும்வருத்த,
என் உயிரும் உடம்பும் வருத்துகின்றனவே" என்கிறாள்.

காமமும் நாணமும்
உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பி னகத்து. (குறள், 1163)