பக்கம் எண் :

168தமிழியற் கட்டுரைகள்

நால்வரணப் பூத வடிவங்களை, மதுரைக் கோட்டை மதில் வாயில் நான்கிலும், நாடக வரங்குகளிலும், கல்லறைகளிலும், எழுதி வைத்தனர்.
  "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்"

(புறம். 183)

  "பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்"

(சிலப். 22: 109)

  "நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்
தண்கதிர் மதியத் தன்ன மேனியன்
............................................................
ஆதிப்பூதத் ததிபதிக் கடவுளும்
.................................................................
பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்
...................................................................
அரைச பூதத் தருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன்
...................................................................
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்
கருவிளை புரையும் மேனியன்................
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
.................................................................
கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றி
..................................................................
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர"

(சிலப். 22: 16-108)

  "தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப்
பூதரை யெழுதி மேனிலை வைத்து"

(சிலப். 3: 106-7)

     இதன் (அடியார்க்கு நல்லார்) உரை:
     "அந்தணர் அரசர் வணிகர் சூத்திரரென்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும் எழுதி, மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்கவைத் தென்க."
  "என்னை?
கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங்
காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை
வழுவில் பூத நான்கும் முறைப்பட
எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே"
 
என்றாராகலின்.    
  "அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்