| | நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்" | (மணி. 6: 54-59.) |
| இப் பாடல்கள் திருவள்ளுவர் காலத்திற்குப் பிந்தினவாயினும், இவற்றுட் சொல்லப்பட்டுள்ள நிலைமை அவர் காலத்திற்கு முந்தியதே. |
| இங்ஙனம் தமிழரைத் தாழ்த்தி அவரொற்றுமையைக் குலைத்த கொடுமையைக் கண்ட திருவள்ளுவர், அதைக் கண்டித்து, |
| | "பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்." | (குறள். 972) |
| | "மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர். | (குறள். 973) |
| | "பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து." | (குறள். 978) |
| | "ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்." | (குறள். 133) |
| | "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்." | (குறள். 134) |
| | "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்." | (குறள். 1033) |
| | "இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். | (குறள். 1035) |
| என்றும், |
| பிராமணரே துறவிற்குரியவர் என்றதை மறுத்து, |
| | "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்." | (குறள். 30) |
| என்றும், |
| துறவறத்தால் மட்டும் வீடு பெறலா மென்றதை மறுத்து, |
| | "அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்." | (குறள். 46) |
| | "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று' | (குறள். 49) |
| என்றும், |