பக்கம் எண் :

170தமிழியற் கட்டுரைகள்

     பிராமணன் வேதம் ஓதுவதனாலேயே மற்ற மூவருணத்தாரும் வாழ்கின்றனர் என்றதை மறுத்து,

  "உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து."

(குறள். 1032)

  "இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை"

(குறள். 41)

  "துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
யில்வாழ்வா னென்பான் றுணை."

(குறள். 42)

என்றும்,

     பிராமணன் வேள்வி செய்வதனாலேயே உலகில் மழை பெய்கின்ற தென்றதை மறுத்து,

  "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு."

(குறள். 545)

  "முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.

(குறள். 559)

என்றும், திருக்குறளியற்றித் தமிழரை மீட்டார்.

2. வாழ்க்கை வழிகாட்டியார்.

  "கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை."

(குறள். 9)

  "எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு."

(குறள். 392)

  "கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை."

(குறள். 414)

  "மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு."

(குறள். 60)

  "மனையாளை யஞ்சு மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று."

(குறள். 904)

  "இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு."

(குறள். 920)

  "பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்."

(குறள். 146)

  "தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்."

(குறள். 67)

  "மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்."

(குறள். 70)