| | "ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு ளேனை யிரண்டு மொருங்கு." | (குறள். 760) |
| | "முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்." | (குறள். 616) |
| | "பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து மிருடீர வெண்ணிச் செயல்." | (குறள். 675) |
| | "எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு." | (குறள். 467) |
| | "அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும்." | (குறள். 625) |
| | "ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்." | (குறள். 33) |
| | "ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு." | (குறள். 642) |
| | "தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்." | (குறள். 293) |
| | "உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல்." | (குறள். 282) |
| | "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்." | (குறள். 314) |
| | "செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது." | (குறள். 101) |
| | "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதூஉ மில்." | (குறள். 460) |
| | "ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும்." | (குறள். 792) |
| | "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. | (குறள். 523) |
| | "அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். | (குறள். 443) |
| | "மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின். | (குறள். 942) |
| | "தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று." | (குறள். 236) |