பக்கம் எண் :

10விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

தான் இந்தச் சமயச் சார்பற்ற தன்மை மறைந்தது . பல்லவப் பேரரசு ,ஒரு
காலத்தில்  சைவத்திற்கு  எதிராகச்  சமணச்சார்பு கொண்டதாக இருந்தது.
பின்னர், சமணத்தைக் கைவிட்டு, சைவ  சமயச் சார்புடையதாக  மாறியது.
பல்லவப்  பேரரசேயன்றி , திருஞானசம்பந்தர் -திருநாவுக்கரசர் காலத்தில்
பாண்டியர்   பேரரசும்  முதலில்  சைவத்தைச்  சார்ந்திருந்தது . பின்னர்,
சமணச் சார்புடையதாகி, மீண்டும் சைவத்தைத் தழுவியதாக அறிகின்றோம்.

கலப்புத் தமிழ்!

     தமிழ் வேந்தர்கள், சமயச் சார்பற்ற முறையில் -'தமிழர்' என்ற  இன
உணர்வோடு - ஆட்சிபுரிந்த  காலம்வரை  தமிழ்  மொழி   சிறப்புடனும்
செல்வாக்குடனும்  உரிமை  வாழ்வு  நடத்தியது. இதற்கு மாறாக , தமிழக
அரசர்கள் சமயச் சார்புடையவர்களான பின்னர் தமிழ் மொழியின் வாழ்வு
தேய்பிறையாகி, தமிழகத்திலே சம்ஸ் கிருதத்தின் செல்வாக்கு வரம்பு  மீறி
வளர்ந்தது . சங்ககால மன்னர்கள் - பாரி,  காரி,  ஓரி,  ஆய்,   பேகன்,
செழியன் , வளவன்  எனப் பெயர் பெற்றிருந்தனர் . அவ்வளவும்   தூய
தமிழ்ப்பெயர்கள் ! ஆனால் ,தமிழ்மொழி உரிமை  இழக்கத்  தொடங்கிய
பின்னர் , சோழ  மன்னர்களின்  பெயர்கள்  இராசராசன் ,இராஜேந்திரன்,
குலோத்ங்கன் எனவும் ;பாண்டிய வேந்தர்களின் பெயர்கள் அரிமர்த்தனன்,
வரகுணன் எனவும் வட மொழிப் பெயர்களாக மாறின. சேர மன்னர்களோ,
தமிழ்  மொழிக்கே  அயலாராயினர் . சேர  நாட்டிலே  சம்ஸ்கிருதத்தின்
செல்வாக்கு வளர்ந்ததால், அது 'கேரளம்' ஆனது. மக்களின் பெயர்களும்
இந்த 'விதி'க்கு விலக்காக இல்லை.

     தமிழ்  மூவேந்தர்  காலத்திலேயே தமிழின் தனித்தன்மை மறைந்து,
அரசியலில் அதன் செல்வாக்குக் குறைந்து வந்த தென்றால் , ஆந்திரரும்
மராத்தியரும்  மொகலாயரும்  தமிழகத்திலே அரசியல் ஆதிக்கம் பெற்ற
காலத்தில் இன்னும் மோசமானது. ஆங்கிலேயர் காலத்திலோ, நமது தாய்
மொழியின் வாழ்வை இருள் கவ்விவிட்டது.

     அன்னிய  மொழியினர் - இனத்தினர் தமிழகத்தின் மீது  ஆதிக்கம்
பெற்றிருந்த    காலங்களிலேயும்   புதுப்புது   இலக்கியங்கள்   தமிழில்
தோன்றினவென்றாலும், அவையனைத்தும் தெய்வங்கள்  மீது  துதிபாடும்
பிரபந்தங்கள் - ஸ்தல  புராணங்கள்  எனப்படும்  சமய  இலக்கியங்களே
யன்றி ,    சமூக     இலக்கியங்களல்ல .    சமூக   இலக்கியங்களைப் 
படைப்பது  பாவம்  என்றகருத்துக் கூட  நிலவியது.  சங்க    இலக்கிய
ங்களைப்    படிப்போர்    நாத்திகராகி    விடுவர்    என்று    கூடப்