பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 113

பிற  சில  குறிகளேனும் நம்   தமிழ்ப்பாஷை  எழுத்துக்களோடு சேர்க்கப்பட
வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.

    "நமது நண்பர் ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதியவர்கள் சென்ற ஆடி மாதத்தில்
வெளிவந்த தமது "ஞானபாநு"வில் "தமிழில் எழுத்துக் குறை" என்னுந் தலைப்
பெயரோடு  ஒரு  நிருபம்   வரைந்துள்ளார்கள்.  அந்நிருபத்தில் மேற்கண்ட
சேர்க்கையைச்  செய்யவேண்டு   மென்பதற்காகக்  கூறப்பட்டுள்ள  காரணம்
ஒன்றே.   அஃதாவது   பிற    பாஷைகளின்  மனிதப்பெயர்,  நகரப்பெயர்,
முதலியவற்றிற்  சிலவற்றை  அப்பாஷையாளர்  உச்சரிக்கும்  சப்தத்தில் நாம்
உச்சரிக்குமாறு  செய்யத்  தக்க  சில எழுத்துக்கள்  நமது தமிழ்ப்பாஷையில்
இல்லையென்பதே.

     "தெய்வபாஷை யென்றும் பூரண பாஷையென்றும் பல பாஷைகளுக்கும்
தாய்ப்பாஷை    யென்றும்     சொல்லப்படுகிற    சம்ஸ்கிருத     பாஷை
எழுத்துக்களோடும்... ழ, ற, ன, F,Z என்னும் எழுத்துக்களையாவது அவற்றின்
ஒலிகளைக்  குறிக்கும்   குறிகளையாவது   சேர்ப்பதற்கு    நண்பரவர்களும்
அரவிந்தரவர்களும்  முயற்சி  செய்து  வெற்றி  பெறுவார்களாயின் அவர்கள்
நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழிகாட்டிகளாவார்கள். பின்னர் நமது தமிழ்
மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள்.

     "இதுகாறும்  தமிழ்ப்பாஷை   எழுத்துக்களில்   குறையுள்ளது   என்று
கூறியவர்களில்  ஒருவரும்  தமிழ்  இலக்கண  இலக்கியங்களைப் பூரணமாகக்
கற்றுணர்ந்தவராகவாவது சம்ஸ்கிருத சம்பந்த மில்லாதவராகவாவது சம்ஸ்கிருத
பாஷையில்  மேற்  சொல்லிய  திருத்தங்களையோ வேறு திருத்தங்களையோ
செய்யவேண்டுமென்று    கூறியவராகவாவது     காணப்படவில்லையென்றும்
அவர்கள்  நம்  தமிழ்ப்பாஷையைத்   திருத்த முயல்கின்றார்களோ  வருத்த
முற்படுகிறார்களோ என்றும் நம் தமிழ் மக்களிற் சிலர் ஐயமுறுகின்றனர்."

நட்பினைக் காக்க...

      வ.உ.சி.யின்  கண்டனத்துக்குப்  பின்னர், பாரதியார்  தமது  நிலையை
விளக்கி  " ஞானபாநு "வில்  எழுதினார். அதனை  முழு  அளவில்   இங்கு
தருகின்றோம்.