பக்கம் எண் :

2விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

      பரம்பொருளே   பால்மயக்கங்  காட்டிக்   காட்சியளித்தாலும்  அப்
பொருளையும்  பெயரிட்டழைக்கும்  ஆற்றல்  தமிழுக்கு உண்டு  என்கிறார்
குமரகுருபரர் .  ஆண்பாதி - பெண்பாதியாக  ஒரு  வடிவம் தோன்றினால்,
அந்த வடிவை 'ஒருத்தன்' என்பதா? 'ஒருத்தி'  என்பதா?-என்ற வினாவினை
எழுப்பி, 'ஒருத்தர்' என்ற சொல்லால் சுட்டிக்  காட்ட முடியும் என்று விடை
தருகிறார்.

      அத்தகு  ஆற்றல்மிக்க  மொழி ,  " இறைவனால்  படைக்கப்பட்ட
அகிலத்தின் -அண்ட சராசரங்களின் நிலைகளையும்  நியதிகளையும் கூறும்
திறனற்றது . என்றனர் பரதேசிகளாய் வந்த பறங்கியர்கள்  .படைத்தவனின்
ஆற்றலையே அளந்து காட்டிய மெய்ஞ்ஞானியர்களைத்  தோற்றுவித்த நம்
தாய்மொழி, அவனால் படைக்கப்பட்ட பொருள்களின்  ஆற்றலை அளந்து
கூறும்  விஞ்ஞானியர்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல்  அற்றது  என்றனர்,
நம்மவர்களிலேயும் சிலர்.

     இந்த அவலநிலை - ஆங்கில மொழியின்   ஆதிக்கக்  கொடுமை -
ஆங்கிலேயர்  இந்த  நாட்டில்  புகுந்த  அரை  நூற்றாண்டுக்  காலத்திற்
குள்ளேயே  குமரிமுதல்  இமயம்வரை  பரவி விட்டது .  பிரதேச மொழி
ஒவ்வொன்றும் உரிமையிழந்து ஒடுங்கிவிட்டது.

      தமிழ்  இனத்தவர்க்குத் தமிழ்தான் தாய்மொழி . பிறந்த  குழந்தை,
தன்னைப்  பெற்றவளை ' அம்மா ' என்று அழைக்கின்றது . பெற்றவளும்,
'கண்ணே' என்று  தன் குழந்தையை  அழைக்கின்றாள். இப்படி ,  தாயை
அழைத்தமொழி-தாயாலும் அழைக்கப்பட்ட மொழி தமிழேயாதலால்,  அது
நம் தாய்மொழி ஆகிறது.

      அந்த அருமை மொழி , ஆங்கிலேயர் வேங்கடத்திற்குத்  தெற்கே
அரசியல்  ரீதியில்  ஆதிக்கம்  பெறுவதற்கு  முன்பேனும்  உரிமையுடன்
வாழ்ந்ததா என்றால்,'இல்லை' என்பதை வெட்கத்தோடும் வேதனையோடும்
சொல்ல வேண்டியிருக்கிறது . பிரச்சா ரத்திற்காக  அல்லாமல், ஆராய்ச்சி
க்காகவேனும் தமிழ்மொழி உரிமை இழந்த வரலாற்றைச்சிறிது சுருக்கமாகக் கூறுவோம்.

இமயம்வரை தமிழ்!

      தென்குமரிதொட்டு   வடஇமயம்  வரை ஒரு  மொழி    வைத்து
உலகாண்டனர் தமிழர் ."குமரியொடு வடஇமயத்து  ஒரு  மொழி  வைத்து
உலகாண்ட   "சேரலாதன்"     என்பது ,    சிலப்பதிகாரம்  'வாழ்த்துக்
காதை'யின்     துவக்கத்தில்    உள்ள   'உரைப்பாட்டுமடை'     தரும்
செய்தியாகும் .   மதுரைக்    காண்டம் ,    'காடுகாண்    காதை'யிலே,