பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 3

       பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
       குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
       வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
       தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

    என்று கூறி, சேரன் செங்குட்டுவனை வாழ்த்துகின்றான்,  அந்தணனான
மாடல மறையோன்.

     சிலப்பதிகாரம்  தரும்  இந்தச் சான்றுகளால் ,  வரம்பிட்டுச்  சொல்ல
முடியாத  ஒரு  காலக்கட்டத்திலே , குமரிதொட்டு  இமயம்   வரை  தமிழ்
மொழியே  வழங்கிவந்தது புலனாகின்றது .  இ்து  எப்படியாயினும் ,  குமரி
தொட்டு வேங்கடம் வரை உள்ள - இன்று நாம் வாழ்கின்ற - தமிழகத்திலே
கடந்த  இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகத் தமிழ்மொழி  ஒன்றே  வழங்கி
வந்தது என்பதனை மறுப்பார் இலர் .  மூவாயிரம்  ஆண்டுகட்கு  முன்பே
தனக்கென ஒரு  இலக்கணத்தைப் பெற்று , அதற்கு  முன்னும்  பின்னுமாக
நீண்டதொரு இலக்கியப் பாரம்பரியத்தையும் பெற்று  வாழ்வாங்கு  வாழ்ந்து
வந்திருக்கின்றது தமிழ்மொழி. தன்னேரில்லாத தனி  மொழியே  எனறாலும்,
தெலுங்கு -கன்னடம் - மலையாளம்-துளு  ஆகிய சேய் மொழிகளின் தாய்
மொழியாக இருப்பினும், ஒரு காலக்கட்டத்திலே பிராகிருதம் - சமஸ்கிருதம்
ஆகிய வட மொழிகளின் தொடர்பையும் பெற்றது  நமது  தாய்மொழியான
தமிழ்.ஆம்;தன் உரிமையையும் தனித்தன்மையையும்  இழக்காத நிலையிலே!
இதனை  நினைப்பூட்டவே , தமிழ்த்தாய்  தன்  பண்டைப்  பெருமையைக்
கூறுங்கால், "உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன்"  எனப் பெருமை
பேசியதாக   ஆன்றவிந்தடங்கிய   சான்றோரான   அமரகவி  பாரதியார்
கூறுகின்றார் . சைவ  சமயக்  குரவரான   திருநாவுக்கரசரும் ,  இறைவன்
"முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் " என்று  வருணித்து,  தம்
தாய் மொழி உயர் ஆரியத்திற்கு   நிகரானது   என்பதை  உறுதிப்படுத்து
கின்றார் .  திருஞானசம்பந்தரின்   அவதாரச்   சிறப்பை    வருணிக்கும்
சேக்கிழார் பெருமான்,

      திசையனைத்தின் பெருமைஎலாம்
          தென்திசையே வென்றேற
      மிசையுலகும் பிறவுலகும்
          மேதினியே தனிவெல்ல
      அசைவில்செழுந் தமிழ்வழக்கே
          அயல்வழக்கின் துறைவெல்ல....