இராம்மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவியதுபோல சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்னும் பெயரால் வள்ளலார் தனி நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்தார். "எம்மதமும் சம்மதம்" என்று கோஷித்தார். உயிர்க்குலத்தின் ஒருமைப்பாடு கருதித் தாம் வலியுறுத்தும் தத்துவத்திற்கு "ஆன்மநேய ஒருமைப்பாடு" எனப் பெயர் தந்தார். |