"தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் அகராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன . நமது சங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்று வரை முழுகிக்கிடக்கின்றன. பாடகர்கள் பாடும் கீர்த்தனங்களில் உயர்தரமெல்லாம் தெலுங்குக் கீர்த்தனைகள் . தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள், ஜாவாளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படி யெல்லாம் தெலுங்கு. நமது கிராமங்களி லுள்ள தெலுங்கு ரெட்டிகளும் , நாயுடுமாரும் , ஆந்திர பிராமணப் புரோகிதர்களும் , தெலுங்கு தாசிகளும் , ராயர் சமஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள். நமது விவாக காலங்களில் பாடும் பத்யம், லாலி முதலானவெல்லாம் தெலுங்கு முறை. நமது பாஷையில் "கவனம் (ஆழ்ந்து நோக்குதல்)", "ஜொகுஸு ", "எச்சரிக்கை", "துரை", "வாடிக்கை", " கொஞ்சம் " முதலிய பதிற்றுக் கணக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக்கின்றன."1 தமிழகத்தைத் தமிழர்களே ஆட்சி புரிந்த காலத்தில் தமிழ் மொழிப் புலவர்களே அரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தனர். அவர்களிலே அந்தணர்களும் உண்டு . பல்லவர் , ஆந்திரர் , மராத்தியர் ஆட்சிக் காலங்களிலே அந்தப் பழைய நிலைமையில் மாறுதல் ஏற்பட்டது. தமிழ் அறியாத -தமிழகத்துப் பூர்வ குடியினர் அல்லாத- வடமொழிப் புலவர்கள் ஆளுவோர் மீது செல்வாக்குப் பெற்று விளங்கினர் . விந்தியத்திற்கு வடக்கேயிருந்து மொகலாயர் ஆதிக்கத்திற்குத் தாங்கள் அடிமைப் படுவதைத் தவிர்க்க , ஆந்திர - மராத்திய ஆதிக்கங்களைத் தவிர்க்க முடியாத தீமைகளாகக் கருதித் தமிழர் ஆதரித்திருக்க வேண்டும். தென்னகத்தின் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால் , தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி வலுவற்றிருந்த காலத்திலோ , கிட்டத்தட்ட மூவேந்த ராட்சி ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருந்த காலக் கட்டத்திலோ தான் ஆந்திர - மராத்திய அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தமிழகத்தில் புகுந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம். தமிழ் மூவேந்தர் அல்லா வேற்றுமொழி மன்னர்கள் ஆட்சிக் காலத்திலேயும் தமிழ்மொழி வளர்ச்சி அடைந்தது உண்டு . சமூகத் துறையில் அல்ல; சமயத் துறையிலே! 'பொருள்' எங்கே? அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் 'புருஷார்த் தங்கள்' என்பர் வடமொழிப் புலவர்கள். இந்த நான்கிலே முதல் |