பக்கம் எண் :

156சத்திய சோதனை

Untitled Document
இல்லாமல் நான் வெளியில் நடமாடுவதற்கு எனக்கு உரிமை அளித்து,
ஒரு கடிதத்தை     எழுதிக் கொடுத்தார்.  நான் வெளியில் செல்லும்
போதெல்லாம்    அக்கடிதத்தை  எப்பொழுதும்         என்னிடம்
வைத்திருந்தேன். உண்மையில்        அக்கடிதத்தை உபயோகித்துக்
கொள்ள வேண்டிய சந்தர்ப்பமே எனக்கு   ஏற்பட வில்லையென்றால்
அது தற்செயலேயன்றி வேறில்லை.

     டாக்டர் கிராஸே என்னைத் தம் வீட்டிற்கு அழைத்தார்.நாங்கள்
நண்பர்கள்         ஆகிவிட்டோம்    என்றும் சொல்லலாம். நான்
எப்பொழுதாவது அவர் வீட்டிற்குப் போவேன். ஜோகன்னஸ் பர்க்கில்
பப்ளிக் பிராசிக்யூடராக இருந்த  அவருடைய பிரபலமான சகோதரர்,
அவர் மூலம் எனக்கு அறிமுகமானார்.    போயர் யுத்தத்தின் போது,
ஓர்     ஆங்கில அதிகாரியைக் கொல்ல அவர் சதி செய்தார் என்று
ராணுவக் கோர்ட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவர் ஏழு
வருடச் சிறைத் தண்டனையை அடைந்தார்.   அவர் வக்கீல் தொழில்
செய்யக் கூடாது என்று    நீதிபதிகளும் அவரைத் தடுத்து விட்டனர்.
ஆனால் யுத்தம் முடிந்ததும்    அவரை விடுதலை செய்து விட்டனர்.
டிரான்ஸ்வாலில் வக்கீலாக இருக்க அவரை கௌரவமாக அனுமதித்து
விடவே, வக்கீல் தொழிலை நடத்தி வரலானார்.

     இந்தத்    தொடர்புகள்      பின்னால்  என்னுடைய  ராஜீய
வாழ்க்கைக்கு உதவியாக     இருந்ததோடு,     என் பெரும் பகுதி
வேலைகளையும் சுலபமாக்கி விட்டன.

     நடைபாதையில் நடப்பது சம்பந்தமாக இருந்த   சட்ட விதிகள்
எனக்கு        இன்னும் அதிகக்   கஷ்டத்தைக் கொடுத்தன. நான்
எப்பொழுதுமே உலாவுவதற்குப்   பிரஸிடெண்டு தெரு வழியாக ஒரு
மைதானத்திற்குப் போவேன்.   பிரஸிடெண்டு (ஜனாதிபதி) குரூகரின்
வீடு அந்தத் தெருவில்தான் இருந்தது.    அது மிகவும் அடக்கமான
ஆடம்பரமில்லாத கட்டிடம். அதன் முன்னால்  தோட்டமும் இல்லை.
பக்கத்தில் இருந்த    மற்ற வீடுகளுக்கும்   அதற்கும் வித்தியாசமே
இல்லை. பிரிட்டோரியாவின் லட்சாதிபதிகள்     பலருடைய வீடுகள்
அவர் வீட்டைப் போல் அல்லாமல் அதிக  ஆடம்பரமாக இருந்தன.
அவற்றைச் சுற்றித் தோட்டங்களும்          இருந்தன. ஜனாதிபதி
குரூகரின் எளிய வாழ்வு, மிகப் பிரசித்தமானதாகும். அவர் வீட்டுக்கு
முன்னாலிருந்த       போலீஸ்    காவலைக் கொண்டே அது ஒரு
முக்கியமான         அதிகாரியின் வீடு   என்பது தெரியும். நான்
எப்பொழுதும்   அவ்வீட்டிற்கு    எதிரிலுள்ள நடைபாதை வழியாக
அங்கிருந்த போலீஸ்   பாராக்காரனைக்  கடந்து செல்வது வழக்கம்.
எந்த விதமான தடையோ, தகாராறோ ஏற்பட்டதே இல்லை.

     அங்கே காவலுக்கு இருந்த     போலீஸ்காரனை இப்பொழுது