பக்கம் எண் :

172சத்திய சோதனை

Untitled Document
போராடுவதைப்     போலவே    தங்கள் ராஜீய   உரிமைக்காகவும்
போராடியே      தீருவர் என்பதை   எல்லோரும்   உணரும்படியும்
இக்கிளர்ச்சி செய்தது.

     அச் சமயம் லார்டு ரிப்பன்      குடியேற்ற நாட்டு மந்திரியாக
இருந்தார். அவருக்குப் பிரம்மாண்டமான மகஜர் ஒன்றை அனுப்புவது
என்று முடிவு செய்தோம். இது    சின்ன விஷயமன்று; ஒரே நாளில்
செய்துவிடக் கூடியதும் அல்ல.      தொண்டர்களைத் திரட்டினோம்.
இவ் வேலையில் எல்லோரும் அவரவர்கள் பங்கைச் செய்தனர்.

     இந்த மகஜரைத்    தயாரிப்பதில் நான்       அதிகச் சிரமம்
எடுத்துக்கொண்டேன்.       இவ் விஷயத்தைக் குறித்துக் கிடைத்த
புத்தகங்களையெல்லாம்       படித்தேன்.    ஒரு கொள்கையையும்
உசிதத்தையுமே     முக்கியமாகக் கொண்டவை     மகஜரில் நான்
கூறியிருந்த வாதங்கள்.  இந்தியாவில்   ஒரு வகையான வாக்குரிமை
இருந்து வருவதால்   நேட்டாலிலும்   வாக்குரிமை பெற எங்களுக்கு
உரிமை உண்டு என்று வாதித்தேன். வாக்குரிமையை  உபயோகித்துக்
கொள்ளக் கூடிய இந்தியரின் தொகை    மிகக் குறைவேயாகையால்,
அந்த உரிமை  தொடர்ந்து   இருந்துவரும்படியாகப்      பார்த்துக்
கொள்வதே உசிதமானது என்றும் வற்புறுத்தினேன்.

     இரண்டு வாரங்களுக்குள்   பத்தாயிரம்   கையெழுத்துக்களை
வாங்கினோம். இந்த       வேலையில் ஈடுபட்டவர்கள்,  இத்தகைய
வேலைக்கே முற்றும்   புதிதானவர்கள். இதைக்கொண்டு கவனித்தால்,
மாகாணம்          முழுவதும் போய்,   அவ்வளவு    ஏராளமான
கையெழுத்துக்களை வாங்கியதும்   அற்ப சொற்பமான வேலையல்ல
என்பது   விளங்கும்.  விண்ணப்பத்தின்   கருத்தை முற்றும் புரிந்து
கொள்ளாதவர்கள் யாரிடமும்   கையெழுத்து வாங்கக் கூடாது என்று
முடிவு  செய்திருந்தோம். ஆகையால்,  விசேஷத் தகுதி  பெற்றிருந்த
தொண்டர்களையே   இந்த வேலைக்குத்        தேர்ந்தெடுத்தோம்.
கிராமங்களோ, ஒன்றுக்கொன்று தொலை தூரத்தில் இருந்தன. அநேக
ஊழியர்கள்,  தங்கள்   முழு மனத்தையும்        இவ் வேலையில்
செலுத்தினால்தான்   இவ் வேலை சீக்கிரத்தில் முடியும்.  அவ்வாறே
பலர்,     முழுமனத்துடன் வேலை செய்தனர்.  இவ் வரிகளை நான்
எழுதும்போது சேத் தாவூது முகமது, ருஸ்தம்ஜி, ஆதம்ஜி, மியாகான்,
ஆமத் ஜீவா   ஆகியவர்கள்  தெளிவாக என்       கண்  முன்பு
தோன்றுகின்றனர்.    அதிகப் படியான   கையொப்பங்களை வாங்கி
வந்தவர்      இவர்களே.  தாவூது சேத்,   நாளெல்லாம் வண்டியில்
சென்றவண்ணம்   இருந்தார்.  அவ்வேலையில் இவர்களுக்கு இருந்த
அன்பினாலேயே இதையெல்லாம் செய்தனர்.     இவர்களில் ஒருவர்
கூடத் தங்கள் செலவுக்குப் பணம் வேண்டும்  என்று கேட்டதில்லை.
தாதா