பக்கம் எண் :

26சத்திய சோதனை

Untitled Document

போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம்.
வந்து சாப்பிடும்படி வழக்கம்போல        என் தாயார் கூப்பிடுவார்.
வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம்   என்ன என்றும் கேட்பார்.
எனக்கு இன்று பசியே இல்லை.ஏதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது
என்று சொல்லிவிடுவேன். இவ்விதம்        நான் சாக்குப் போக்குச்
சொல்லும்போது, என் மனம் வேதனைப்படாமல் இராது.  நான் பொய்
சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை
அறிவேன். அதோடு நான் மாமிசம்     சாப்பிடுகிறேன் என்பது என்
தாயாருக்கும் தந்தைக்கும்           தெரிந்து விடுமாயின் அவர்கள்
அதிர்ச்சியடைந்து     வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
இவற்றை நான்          அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத்
தின்றுகொண்டே இருந்தது.

     ஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்:
‘மாமிசம் சாப்பிட வேண்டியது முக்கியம்தான்;  நாட்டின் சாப்பாட்டில்
சீர்திருத்தம் செய்ய          வேண்டியதும் அவசியமே. என்றாலும்,
தாயிடமும், தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது
மாமிசம்         சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால்,
அவர்கள்     உயிரோடு இருக்கும்        வரையில் நான் மாமிசம்
சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப்      பிற்காலம் நான் சுதந்திரம்
பெற்றுவிடுவேன்.   அப்பொழுது நான் மாமிசத்தைப் பகிரங்கமாகவே
சாப்பிடுவேன்.   ஆனால், அச்சமயம்        வரும் வரையில் நான்
அதைச்சாப்பிடாமல் இருந்து விடுவேன்’.

     நான் செய்துகொண்ட       இந்த முடிவை என் நண்பருக்குத்
தெரிவித்தேன். அதன் பின்னர்   மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை.
தங்கள் குமாரர்களில்           இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள்
ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத்   தெரியவே தெரியாது.
பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற     எனது புனிதமான
ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை   நான் விட்டேன்.
ஆனால்,  என் நண்பருடன்      பழகுவதை மாத்திரம் விடவில்லை.
அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று       நான் கொண்ட ஆர்வம்
எனக்கே     பெருந்தீங்காக      விளைந்தது.  இந்த உண்மையை
அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.

     இதே சிநேகம், என் மனைவிக்கே    நான் துரோகம் செய்யும்
படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு      சிறு மயிரிழையில்
தப்பிக்கொண்டேன். என் நண்பர்  ஒரு நாள் என்னை ஒரு விபசாரி
வீட்டிற்கு அழைத்துச்        சென்றார்.   அங்கே நான் எவ்விதம்
நடந்துகொள்ள வேண்டும்  என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து
என்னை    உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. கொடுக்க           வேண்டிய பணத்தையும்
கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள்   போய்விட்டேன். ஆனால்,