பக்கம் எண் :

குழந்தை மணம்9

Untitled Document
மறைத்துவிடவே     விரும்புகிறேன். இந்த    விவரங்களைப் பிற்பாடு
சொல்லுகிறேன். ஆனால், இவற்றிற்கும்,    இந்தக்கதையை      நான்
எழுதுவதன் முக்கியமான நோக்கத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.

     ஆகவே, என் அண்ணனையும் என்னையும் ராஜ்கோட்டிலிருந்து
போர்பந்தருக்கு     அழைத்துச் சென்றனர். முடிவான நாடகத்துக்குப்
பூர்வாங்கமாக எங்கள்   உடம்பெல்லாம் அரைத்த மஞ்சளைப் பூசியது
போன்ற சில    வேடிக்கையான      விவரங்களும் உண்டு. ஆனால்,
அவற்றையெல்லாம் நான் கூறாமல் விட்டுவிட வேண்டியதுதான்.

     என் தந்தையார்  ஒரு திவான். ஆனாலும்    ஓர் ஊழியர்தான்.
அவரிடம்   தாகூர் சாஹிப் விசேஷ   அபிமானம் வைத்திருந்ததனால்
அவர் கொஞ்சம் அதிகப்படியாகவே ஊழியம் புரிந்தார். தாகூர் சாஹிப்
கடைசி நிமிஷம் வரையிலும் என்  தந்தையாரைப் போக விடவில்லை.
போக அனுமதித்தபோது, பிரயாண காலத்தில் இரண்டு      தினங்கள்
குறைவதற்காக,விசேஷக் குதிரை வண்டிகளை என் தந்தைக்கு ஏற்பாடு
செய்ய அவர்  உத்தர விட்டார். ஆனால்    விதி     வேறுவிதமாக
இருந்துவிட்டது.ராஜ்கோட்டிலிருந்து     போர்பந்தருக்கு 120 மைல்கள்.
சாதாரண வண்டியில் வந்தால் ஐந்து நாட்கள் ஆகும். என் தந்தையோ
மூன்றே   நாட்களில் வந்துவிட்டார்.ஆனால்,   மூன்றாவது கட்டத்தில்
வந்து    கொண்டிருந்தபோது   அவர்  வந்த  குதிரை வண்டி குடை
சாய்ந்தது. அவர்    பலத்த      காயமடைந்தார்.   காயங்களுக்காக,
உடம்பெல்லாம்   கட்டுப் போட்டுக் கொண்டு       வந்து சேர்ந்தார்.
நடைபெறவிருக்கும்    வைபவத்தில்    அவருக்கும்    எங்களுக்கும்
இருந்திருக்க வேண்டிய சிரத்தையில்    பாதி இதனால் போய்விட்டது.
ஆயினும் எப்படியும்      வைபவம் நடந்தாக வேண்டும். முகூர்த்தத்
தேதிகளை    மாற்ற முடியுமா?    குழந்தைகளுக்குக் கல்யாணத்தில்
இயல்பாக    ஏற்படும் சந்தோஷம் எனக்கும் ஏற்பட்டிருந்தது. அதில்
மூழ்கியதன் காரணமாக, என்     தந்தையின் காயங்களால் அடைந்த
மனக்கிலேசத்தை மறந்திருந்தேன்.

     என் பெற்றோரிடம் எனக்குப்   பக்தியுண்டு. அதே அளவுக்குச்
சதை உணர்ச்சிகளிலும் எனக்கு  ஈடுபாடு உண்டு. என் பெற்றோருக்கு
நான் ஆற்ற வேண்டிய பக்தியோடு       கூடிய பணிக்காக எல்லாச்
சுகங்களையும், இன்பங்களையும் நான் தியாகம் செய்துவிட வேண்டும்
என்பதை அப்பொழுது நான்  அறிந்திருக்கவில்லை. எனினும்,  இன்ப
நுகர்ச்சியில் நான் கொண்டிருந்த    ஆசைக்குத் தண்டனையாக ஒரு
சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுதிலிருந்து      அந்தச் சம்பவம் என்
மனத்தில் உறுத்திக்கொண்டே      இருக்கிறது. அதைப்பற்றிப் பிறகு
சொல்லுகிறேன். ‘ ஆசைகளைத் துறக்காமல்,         ஆசைக்குரிய
பொருள்களைத் துறப்பதென்பது, நீ எவ்வளவு