பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்213

21. பழனி

தமிழ்நாட்டிலுள்ள முருகனது தலங்கள் யாவற்றிலும்
முதன்மையானதும், முருகனது அறுபடை வீடுகளில் சிறப்பானதும்
பழனி ஆகும். பழனி நகரின் தலவரலாற்றுச் சுருக்கம் கீழே
தரப்பட்டுள்ளது.

இன்றைய பழனி நகர்ப்பகுதி சங்க காலத்தில் கொங்கு
நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு நாட்டின்
உட்பிரிவுகளில் திருஆவினன் குடிநாடு அல்லது வையாபுரி நாடு
ஒன்றாகும். ‘ஆவினன் குடி’ என்பது இன்றைய பழனி நகர்ப்
பகுதியாகும். ஆவினர் குடியினைச் சேர்ந்த மன்னர்கள்
இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர். சங்க கால வள்ளல்கள்
ஏழுபேரில் ஓருவரான வையாவிக் கோப்பெரும்பேகன் பழனிப்
பகுதியை ஆட்சி புரிந்தார் என்று கருதப்படுகிறது. கொங்குநாட்டைச்
சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் வென்றபொழுது
பழனிப் பகுதியும் அம்மன்னர்களின் ஆட்சியின்கீழ் வந்தது. மதுரை
நாயக்க அரசு காலத்தில் (கி.பி. 1529-1736) இவ்வரசின் ஒரு
பகுதியாகப் பழனி இருந்தது. மதுரைநாயக்கர் ஆட்சி முறையில்
பல பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அப்பொழுது பழனியும்
பாளையக்காரர் ஆட்சியின் கீழ் வந்தது. பழனி நகரை அடுத்துள்ள
ஆயக்குடியும், விருப்பாச்சியும் இதர முக்கிய பாளையங்களாகும்.

பழனிப்பகுதியின் பாளையக்காரர்கள் ஆந்திராவின்
அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள அகோபிலம் பகுதியிலிருந்து
வந்த தெலுங்குப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் மதுரை நாயக்க
அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதருடன் தமிழகத்திற்கு வந்தவர்கள்
என்று கருதப்படுகிறது. மதுரைக் கோட்டையின் ஒரு
கொத்தளத்தைக்
காவல் புரியும் பணியை இவர்கள் பெற்றிருந்தனர்,
பழனி பாளையத்தை முதலில் தோற்றுவித்தவர் ஆயக்குடி
பாளையக்காரர் மரபினரின் உறவினர் ஆவார். ஆயக்குடி
பாளையக்காரர்களின் மரபினர், பழனி பாளையக்