பக்கம் எண் :

122தமிழ் இன்பம்

19, சிவனடியார் முழக்கம்*

காலைப்   பொழுது;   தேர்   ஓடும்   திருவீதியில்  பெருமுழக்கம்:
“திருத்தொண்டர்    சங்கம்   -    வாழ்க!    வாழ்க!”   “சிவனடியார்
திருக்கூட்டம்  -  வெல்க!  வெல்க!” “பசியின் கொடுமை- வீழ்க! வீழ்க!”
என்று இரைந்து கொண்டு சென்றது  ஒரு  திருக்கூட்டம். இடையிடையே
‘பம் பம்’ என்று ஆயிரம் சங்குகள் சேர்ந்து ஒலித்தன.

அத்   திருக்கூட்டத்தைச்   சேர்ந்தவர்   பல்லாயிரவர்;   அவர்கள்
கையிலே  திருவோடு;  மெய்யிலே  திருநீறு;   கழுத்திலே   தாழ்வடம்;
இடுப்பிலே  கந்தைத்   துணி;  அப் பண்டாரப் படையைப் பார்ப்பதற்கு
ஊரெல்லாம் திரண்டு எழுந்தது.

ஊருக்கு  மேற்கே  ஒரு  பூந்தோட்டம்;  அங்கே போய்ச் சேர்ந்தது
திருக்கூட்டம்.      தலைவர்    சுந்தரமூர்த்தி    எழுந்து    நின்றார்.
தொண்டார்கள்  கைதட்டி  ஆரவாரித்தனர்.  தலைவர்  தலைவணங்கிப்
பேசலுற்றார்;

“தோழர்களே!  திருத்தொண்டர்களே!  நெடுங்காலமாக நமது  சங்கம்
உறங்கிக்    கிடந்தது.   ஆயினும்   இன்று    விழித்துக்கொண்டோம்;
ஒற்றுமைப் பட்டோம். திருத்தொண்டர் படை  திரண்டு  எழுந்துவிட்டது.
இதைத் தடுக்க வல்லவர்  இவ்வுலகில்  உண்டோ? (ஒரு குரல்; ‘இல்லை;
இல்லை’. பலத்த ஆரவாரம்). ‘தொண்டர்


* ஆனந்த விகடன், 1946 தீபாவளி மலரில் எழுதியது.