பக்கம் எண் :

அறிவும் திருவும்143

அவரிடம்    அகமலர்ந்தளித்தான்.     அந்    நெல்லிக்   கனியினை
ஒளவையார்  அருந்திய   பொழுது  அதன் தீஞ்சுவையினை அறிந்தார்;
திகைப்புற்றார்.  அந்  நிலையில்  அதிகமான்  அந்  நெல்லிக்  கனியின்
அருமை  பெருமைகளை  எடுத்துரைத்துச்  செழுந்தமிழ்க் கவி பொழியும்
செந்நாப்   புலவர்க்கு  அமுதம்  சுரக்கும்   அருங்கனியே   அமைந்த
உணவாகும்    என்று   மனமகிழ்ந்துரைத்தான்.  பல   நாள்  முயன்று
வருந்திப்  பெற்ற   அருங்கனியைத்   தானருந்தி   இன்புறக்  கருதாது,
பாடிவந்த   கிழவிக்கு   அதனைப்   பரிசாக  அளித்த அருங்குணத்தை
ஒளவையார் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார்.

“நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலை
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே”

‘பொன்னொளி   மாலை   யணிந்த    வள்ளலே!   அணுகுதற்கரிய
மலைவிடரில்  அமைந்த  இனிய   கனியின்  அருமையையும்  கருதாது,
பயனையும்  குறியாது,   அக்கனியை  என்னிடம்   உவந்தளித்தனையே!
உன்  பெருமையை  ஏழையேன்   எவ்வாறு   புகழ்வேன்?  பாலாழியில்
எழுந்த   அமுதினைப்  பிறர்க்களித்து,   நஞ்சுண்டு   கண்டம்  கறுத்த
செஞ்டைக்    கடவுள்   போல்   நீயும்   என்றென்றும்    இவ்வுலகில்
வாழ்வாயாக!’  என்று  நிறைந்த  மொழிகளால்  ஒளவையார்   அருளிய
வாழ்த்துரையில் கருநெல்லிக் கனியின் வரலாறும் அதனை