பக்கம் எண் :

இருமையில் ஒருமை235

சிவத்து ரோகமும் நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
வசந்த ஆரியர் நாடெங்கள் நாடே”

“எனது      நாடு  நன்னாட்டின்  முன்னாட்டும்  நாடு;  விண்ணோரும்
விரும்பி  வரும்  நாடு;   எத்   திசையும்  புகழ் மணக்க இருந்திலங்கும்
நாடு;  நீங்காத  வல்வினையும்  நீங்கிய நன்னாடு; அரனார் விளையாடிய
திருநாடு;   ஆரணம்   பாடிய   அருமை  சான்ற  நாடு;  இத்  தகைய
பழம்பெருமை    உனது   நாட்டுக்கு  உண்டோ?”  என்று  அளவிறந்த
மகிழ்ச்சியால்   ஆடிப்   பாடினாள்.  இப்பாட்டில்  அமைந்த  நாட்டின்
பெருமையை   நன்றாகக்   கேட்ட  பொதிய  மலை மாது, புன்முறுவல்
பூத்துத் தன் மலையின் பழம் பெருமை கூறத் தொடங்கினாள்:

“மந்தமா ருதம்வளரும்
   மலையெங்கள் மலையே

வடகலைதென் கலைபயிலும்

   மலையெங்கள் மலையே

கந்தவேள் விளையாடும்

   மலையெங்கள் மலையே

கனகநவ மணிவிளையும்

   மலையெங்கள் மலையே

இந்தமா நிலம்புரக்கும்

   அங்கயற்கண் அம்மை

இன்பமுறும் தென்பொதிய
 
   மலையெங்கள் மலையே!