பக்கம் எண் :

52தமிழ் இன்பம்

II. இயற்கை இன்பம்  

6. பொங்கலோ பொங்கல்*

தமிழ்   நாட்டிலே  பல சாதிகள்  உண்டு ; பல சமயங்கள்  உண்டு.
ஆயினும்,  தமிழர்  அனைவருக்கும்  பொங்கல்  நாள் ஒரு புனித நாள்.
அந்த நாளில்,  வீடுதோறும்  சுதையின் விளக்கம் ; வீதிதோறும் மங்கல
முழக்கம் ;  ‘பொங்கலோ  பொங்கல்’  என்பதே  எங்கும்  பேச்சு.

பொங்கல்  விழா நடைபெறும் காலமும் இனியகாலம் ; கார் உலாவும்
வானமும்,  நீர்  உலாவும் ஏரியும்  கருணை காட்டும் காலம் ; இயற்கை
அன்னை   சுமையான  புடைவை  உடுத்து, பன்னிறப்  பூக்களைச் சூடி,
இனிய    காயும்,  கனியும்   கரும்பும்   அணிந்து   இன்பக்   காட்சி
தருங்காலம்.

பொங்கலுக்குத்  தலைநாள்  போகி  பண்டிகை. தைக் கொண்டாடும்
கருத்தென்ன? போகி என்பவன் 


 

* சென்னை, ‘பாரததேவி’ யின் பொங்கல் மலரில் எழுதியது.