II. இயற்கை இன்பம் 6. பொங்கலோ பொங்கல்* தமிழ் நாட்டிலே பல சாதிகள் உண்டு ; பல சமயங்கள் உண்டு. ஆயினும், தமிழர் அனைவருக்கும் பொங்கல் நாள் ஒரு புனித நாள். அந்த நாளில், வீடுதோறும் சுதையின் விளக்கம் ; வீதிதோறும் மங்கல முழக்கம் ; ‘பொங்கலோ பொங்கல்’ என்பதே எங்கும் பேச்சு. பொங்கல் விழா நடைபெறும் காலமும் இனியகாலம் ; கார் உலாவும் வானமும், நீர் உலாவும் ஏரியும் கருணை காட்டும் காலம் ; இயற்கை அன்னை சுமையான புடைவை உடுத்து, பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும், கனியும் கரும்பும் அணிந்து இன்பக் காட்சி தருங்காலம். பொங்கலுக்குத் தலைநாள் போகி பண்டிகை. தைக் கொண்டாடும் கருத்தென்ன? போகி என்பவன் * சென்னை, ‘பாரததேவி’ யின் பொங்கல் மலரில் எழுதியது. |