பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
37

     எ-டு:    

இறந்தகாலம்

     
     தமிழ் முற்று தமிழ் எச்சம் மலையாள முற்று
     
     செய்தான் செய்து செய்து
     அடித்தாள் அடித்து அடிச்சு
     அறிந்தார் அறிந்து அறிஞ்ஞு
     ஆயிற்று ஆய் ஆயி
     வந்தன வந்து வந்நு
     வாழ்ந்தேன் வாழ்ந்து வாணு
     பாடினோம் பாடி பாடி
     புறப்பட்டாய் புறப்பட்டு புறப்பெட்டு
     வாங்கினீர் வாங்கி வாங்ஙி
     

நிகழ்காலம்

     
     தமிழ் முற்று ஈறு நீங்கிய மலையாள முற்று
  தமிழ் வடிவம்  
     
     செய்கின்றான் செய்கின்று செய்யுந்நு
     அடிக்கின்றான் அடிக்கின்று அடிக்குந்நு
     அறிகின்றார் அறிகின்று அறியுந்நு
     ஆகின்றது ஆகின்று ஆகுந்நு
     வருகின்றன வருகின்று வருந்நு
     வாழ்கின்றேன் வாழ்கின்று வாழுந்நு
     பாடுகின்றோம் பாடுகின்று பாடுந்நு
     புறப்படுகின்றாய் புறப்படுகின்று புறப்பெடுந்நு
     வாங்குகின்றீர் வாங்குகின்று வாங்ஙுந்நு

    இதனால், 'கின்று' என்னும் நிகழ்கால இடைநிலை மலையாளத்தில் 'குந்நு' அல்லது 'உந்நு' என்று திரிந்திருப்பதைக் காணலாம்.

    'செய்யும்' என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்று,   பால் காட்டும் ஈறில்லாததாயும், பலபாற்குப் பொதுவான ஈறுள்ளதாயும், பலுக்குவதற்கு எளிதாயும், இடைநிலையின்றிச் சுருங்கியதாயும், இருத்தலின்; அதுவே மலையாளத்திலும் (மூவிட) எதிர்கால வினைமுற்றாக வழங்கி வருகின்றது.

    பண்டைச் சேரநாட்டுத் தமிழிற் போன்றே, முதற்கால மலையாளத் திலும் வினைமுற்றுகள் பாலீறுகொண்டு வழங்கியமை, பழைய மலையாளச் செய்யுளாலும், யூதருக்கும் சிரியக் கிறித்தவர்க்கும் அளிக்கப்பட்ட பட்டயத்தாலும், பழமொழிகளாலும் அறியக் கிடக்கின்றது. பாலீறுகொண்ட வினைமுற்றுகள் இன்றும் மலையாளச் செய்யுளில் ஆளப்பெறும்.