பக்கம் எண் :

154ஒப்பியன் மொழிநூல்

“சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்”

என்று அருணகிரிநாதர் பாடுதல் காண்க.

பிற்காலத்தில் கொங்குநாடு ஒரு நிலையான போர்க்கள மாய் மாறியதாலும், தொல்காப்பியர் காலத்திற்குப்பின் மேலைக் கடற்கரை சற்று விரிவடைந்ததினாலும், சேரன் தன் அக நாட்டுத் தலைநகரையும் மேலைத் துறைநகராகிய வஞ்சிக்கு மாற்றி அதற்குக் கருவூர் என்றும் பெயரிட நேர்ந்தது.

மேலைக்கடற்கரையின் விரிவுபற்றியே, பரசுராமர் தம் தவ நிலையத்திற்கு இடம்வேண்டி, ஓர் அம்பெய்து மேலைக் கடலைப் பின்வாங்கச் செய்தார் என்ற கதையும் எழுந்தது.

'நாற்பெய ரெல்லை' என்றது நாற்றிசை எல்லைகளை யேயன்றி நால்வேறு மண்டலங்களையன்று. மேலும், பிற்காலத் துருவான மண்டலங்கள் நான்கல்ல, ஐந்தாகும். அவை, பாண்டி மண்டலம், சோழமண்டலம், சேரமண்டலம் அல்லது மலை மண்டலம், தொண்டைமண்டலம், கொங்கு மண்டலம் என்பன வாகும்.

சேரநாட்டார் கிழக்கிலிருந்து சென்றவர் என்பதற்கு, அவர் நாட்டமைப்பிற்கு நேர்முரணான கிழக்கு மேற்கு என்னும் சொற்களே போதிய சான்றாம்.

இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.

இனி, “முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பிய னார்க்கு முன்னர் இருந்தார் எனக் கூறுதற்கு ஒரு தடை உளது. தொல்காப் பியனார், வியங்கோள் தன்மை முன் னிலையில் வாராதெனக் கூறுகின்றனர். அவ்வாறிருக்க நீ நிலீஇயர் என்றது முடி நாகராயர் செய்யுளிற் காணப்படு கின்றது. படர்க்கையில் மாத்திரம் வழங்கப்பட்ட வியங் கோள், பிற்காலத்தே முன்னிலையிலும் தன்மையிலும் வழங்கப்படுதல் இயற்கை யாதலின், முடிநாகராயர் தொல் காப்பியனார்க்கு முற்பட்டவ ரென எவ்வாறு கூற முடியும்?”1 என்கிறார் சாத்திரியார்.

“......முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு
மன்னா தாகும் வியங்கோட் கிளவி”

(தொல். வினை. 29)

1. P.S.S. சாத்திரியார், தொல். எழுத்ததிகாரம், முகவுரை, பக். 1, 2