பக்கம் எண் :

12செந்தமிழ்க் காஞ்சி

9

9. தமிழப் பார்ப்பனர்க்கு ஓர் வேண்டுகோள்

சிந்து பைரவி - முன்னை

   பார்ப்பனரே! பார்ப்பனரே! பழந்தமிழ்ப் பார்ப்பனரே!
   பார்த்திடுக கண்தமிழ்மேல் பாராதீர்ஓர் கையதன்மேல்
 
   ஆண்டுகள் ஐயாயிரமாய் அருந்தமிழே தாய்மொழியாய்
   வேண்டுவவெல் லாமொருங்கே வேண்டியாங்குப் பெற்றீரதனால்
 
   அகத்தியரே முதலாக ஆரியரே தமிழ்வளர்த்தார்
   மகத்துவமாய்ச் சங்கங்களில் வகித்துவந்தார் தலைமையுமே
 
   சூரிய நாராயணமா சாஸ்திரியார் காலம்வரை
   ஆரியர்க் கிருந்ததமிழ் அன்பினுக்கோர் அளவுண்டோ?
 
   வலிந்துதென் சொற்கள் கலைகள் வடமொழியாய்க் காட்டுகின்றீர்
   மெலிந்த சமயங்கண்டு தமிழ்மேற் சென்றாணை செலுத்துவதோ
 
   நாடுமக்குத் தமிழ்நாடு நவிலும் தமிழே தாய்மொழியாம்
   நீடு குலமுந் திரவிடமே நினையாதீர் வேறாக உமை
 
   தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தயவுசெய்து காத்திடுவீர்
   வாய்மை இந்திக் கட்டாயம் வரினே தமிழோ கெட்டுவிடும்.

10. ஆரியப்பார்ப்பனர் தமிழுக்குச் செய்த நன்மை

'கனகசபாபதி தரிசனம் ஒருநாள்' என்ற மெட்டு

ப.

 
   
   ஆரியர் தமிழுக்கே ஆற்றிய பெரும்பணி  
   அளவிட்டுச் சொலவாமோ.  
   

து. ப.

 
   
   சீரிய தமிழிற்கல் லாதுகிடந்த நூலைச்  
   சேர்த்தவர் கல்லாவிடின் செந்தமிழ் உளதாமோ

(ஆரியர்)