பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 13

 

அ.

 
     
   1. ஆரியர் இங்குவந்த போதவர் நூல்களெல்லாம் வேதமொரு

நான்கே

 
  சீரிய தமிழ்க்கலை சேணிலத் தேயறிந்து  
  திரள்திர ளாகவந்து சேர்ந்தமர்ந் தனர்ஈங்கே

(ஆரியர்)

     
   2. அகத்தியர் முதலிய மகத்துவா ரியரேமுன் மிகத்தமிழ்

வளர்த்தவராம்

 
  சகத்திலே வழுதியர் சதுருற நடத்திய  
  சபைமூன்றினும் புலமைத் தலைமை வகித்தவராம்

(ஆரியர்)

11. கட்டாய இந்திக் கல்வியால் தமிழ்க்கு வருங்கேடு

'நந்த வனத்திலோ ராண்டி' - என்ற மெட்டு

   செந்தமிழ்க் கிந்தியின் தொந்தம் - மிகச்
   சிறையற்ற நரியாட்டிற் குள்ளசம் பந்தம்.
 
   இந்தியி னால்வருந் தீமை - இன்று
   இயம்புவேன் கேள்வெறுப் பேதுமில் லாமை.
 
   செந்தமிழ் ஒலிகளோ எளிய - மிகச்
   செயற்கையாம் இந்தியின் ஒலிகளோ வலிய.
 
   இரண்டுமொன் றாய்இசைந் தாலோ - தமிழ்
   எழுத்துக ளின்ஒலி இலகா பின்மாலே.
 
   முந்தியே தென்சொற்கள் மறையும் - இந்தி
   முக்கிய மாய்விடின் மிகவின்னுங் குறையும்.
 
   கலந்திடு முன்னமே கெட்ட - தூய்மை
   கலந்தால் இந்தி தமிழ்கெடுவது முற்ற.
 
   முன்னமே வடமொழி மூலம் - காட்டி
   முத்தமிழ் கெடுத்தவர்க் கொத்தது காலம்.
 
   எத்துணை யோதமிழ்ச் சொற்கள் - பலர்
   நத்தும் பாஷையாம் சமஸ்கிரு தத்துள்.
 
   வடமொழி கடன்கொள்ளா தென்றார் - ஏனை
   வையக மொழியெல்லாம் வடமொழி யென்றார்.