பக்கம் எண் :

26செந்தமிழ்க் காஞ்சி

26

26. சங்ககாலச் சமுதாய நிலை

'ஆசை லீலா' என்ற மெட்டு

ப.

 
   
   சங்ககாலச் சமுதாயம் சாதிமத பேதமாயும்  
   

உ. 1

 
   
   சைவருடன் வைஷ்ணவரும் ஜைனரும்சில் பௌத்தரும்  
   தெய்வமில்லை என்பவரும் சேர்ந்துதமிழ் ஆய்ந்தனர்.

(சங்க)

   

2

 
   
   கற்றவன்கீழ்க் குலத்தனேனும் கனமகிமை பெற்றனன்  
   மற்றவன்மேற் குலத்தனேனும் மதிப்பேதும் அற்றனன்  
   

3

 
   
   பாணரென்னும் இசைக்குலத்தார் பறையருள்ஓர் மரபினர்  
   நாணமின்றி அரசவைக்கண் நாயகமாய் விளங்கினர்

(சங்க)

   

4

 
   
   பார்ப்பனர்எக் குலத்தினோடும் பக்கமாகப் பழகினர்  
   பாக்களிலே அவர்இயல்பைப் பகர்ந்தனர்நல் அழகுடன்

(சங்க)

   

5

 
   
   பிறப்பினாலே எவருக்கேனும் பெருமையில்லை என்றனர்  
   சிறப்புநேரும் அறிவொழுக்கம் சிறந்ததாலே என்றனர்

(சங்க)

   

6

 
   
   தெய்வம் ஒன்றிற்கே சிறந்த திருவிழாவும் நிகழ்ந்திடின்  
   தெய்வம் ஏனைய வற்றிற்கெல்லாம் சிறந்தபூஜை செய்தனர்

(சங்க)