1 |
|
ஆரியவருண
பேதம்வேறே அருந்திராவிட வருணபேதம் வேறே |
கரிய
அறிஞர் இல்லாத போதுதம் கொள்கையிங் காரியர் நாட்டிவிட்டார். |
|
2 |
|
ஆரியப்
பிராமணர் வேதங்களே என்றும் ஓதுகின்ற ஒரு ஜாதியாராம் |
திராவிட
அந்தணர் எவ்வுயிர்க் கும்அருட் செந்தண்மை பூண்டிடும் துறவிகளே |
|
3 |
|
ஆரிய
க்ஷத்ரியர் போர்புரியும்பெரு வீரமுள்ள பல ஜாதிகளே |
திராவிட
அரசர் தென்னாட் டிலேபல முன்னாட்டும் அரச குடும்பத்தினர் |
|
4 |
|
ஆரிய
வைசியர் உழவுட னேபெரு வாணிகமும் ஒன்றாய்ச் செய்துவந்தார். |
திராவிட
வணிகர் வாணிக மேநடுச் சீராக நேராய்ச் செய்துவந்தார். |
|
5 |
|
ஆரிய
சூத்ரர் அடிமைகள் போற்பணி அனைவருக் கும்மிக ஆற்றி வந்தார். |
திராவிட
வேளாளர் குலமோ இந்தத் தென்னொட் டிலேதலை சிறந்ததாகும். |
|
6 |
|
தலைசிறந்த
வேளாளரை யேமிகத் தந்திர மாகநற் சூத்ரரென்று |
தமிழ
ரெல்லாருக்கும் அந்தப்பட்டம் பின்பு தாராள மாகவே தந்துவிட்டார். |
|
7 |
|
மக்க
ளிடைநால் வருணங் களைத்தம் மனம்போல ஆரியர் அமைத்ததுடன் |
அக்கரம்
செய்யுள் தெய்வம் மரம்முதல் அரும்பொருட் கும்மிக வகுத்து |
விட்டார். |
|
8 |
|
தமதுளத்
தாலே சூத்திரப்பேர் மிகத்தாழ்ந்த தென்றாரியர் கொண்டிருந்தே |
தமிழரோ
அதனால் பெருமை கூறிமிகத் தாங்கியே தலைமேற் கொள்ள |
வைத்தார். |