பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 27

27

27. ஆரிய திராவிட வருணபேதம்

பியாக் - முன்னை

1

 
   ஆரியவருண பேதம்வேறே அருந்திராவிட வருணபேதம் வேறே
   கரிய அறிஞர் இல்லாத போதுதம் கொள்கையிங் காரியர் நாட்டிவிட்டார்.
 

2

 
   ஆரியப் பிராமணர் வேதங்களே என்றும் ஓதுகின்ற ஒரு ஜாதியாராம்
   திராவிட அந்தணர் எவ்வுயிர்க் கும்அருட் செந்தண்மை பூண்டிடும் துறவிகளே
 

3

 
   ஆரிய க்ஷத்ரியர் போர்புரியும்பெரு வீரமுள்ள பல ஜாதிகளே
   திராவிட அரசர் தென்னாட் டிலேபல முன்னாட்டும் அரச குடும்பத்தினர்
 

4

 
   ஆரிய வைசியர் உழவுட னேபெரு வாணிகமும் ஒன்றாய்ச் செய்துவந்தார்.
   திராவிட வணிகர் வாணிக மேநடுச் சீராக நேராய்ச் செய்துவந்தார்.
 

5

 
   ஆரிய சூத்ரர் அடிமைகள் போற்பணி அனைவருக் கும்மிக ஆற்றி வந்தார்.
   திராவிட வேளாளர் குலமோ இந்தத் தென்னொட் டிலேதலை சிறந்ததாகும்.
 

6

 
   தலைசிறந்த வேளாளரை யேமிகத் தந்திர மாகநற் சூத்ரரென்று
   தமிழ ரெல்லாருக்கும் அந்தப்பட்டம் பின்பு தாராள மாகவே தந்துவிட்டார்.
 

7

 
   மக்க ளிடைநால் வருணங் களைத்தம் மனம்போல ஆரியர் அமைத்ததுடன்
   அக்கரம் செய்யுள் தெய்வம் மரம்முதல் அரும்பொருட் கும்மிக வகுத்து

விட்டார்.

 

8

 
   தமதுளத் தாலே சூத்திரப்பேர் மிகத்தாழ்ந்த தென்றாரியர் கொண்டிருந்தே
   தமிழரோ அதனால் பெருமை கூறிமிகத் தாங்கியே தலைமேற் கொள்ள

வைத்தார்.