பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 29

3
   3. நிறத்திற் சிறந்தவரே மேலோர் - என்று
  நிறுவினால் குஷ்டர்உயர் பாலோர் - இந்த
  நீணிலத்தில் தட்பவெப்ப
  நிலையினா லாகுமைந்து நிறமே - பல திறமே
   
   4. மாரிலே நூலணிவதன் பெருமை - இந்து
  மாநிலத்தில் பல்குலத்திற் குரிமை - புது
  மனை கட்டும்போது செங்கல்
  எடைகட்டும் சுற்றுவது நூலே - தவிர்மாலே.
   
   5. பார்ப்பனி வயிற்றில்ஒரு மகனும் - ஒரு
  பறைச்சி வயிற்றில்ஒரு மகனும் - வரப்
  பழவினை காரணமோ
  மணவினையால் கருவுறாதோ - பிறக்காதோ.
   
   6. சந்திர சூரியரென்றே சுடரும் - எல்லாச்
  சாதிகட்கும் ஒன்றாய் வானம் படரும் - மிகச்
  சாடுகின்ற காற்றுமழை
  சாதிக்கொரு வேற்றுமையோ சாற்றும் - எந்தவாற்றும்
   
   7. எழுவகை யானஉடல் தாது - ஒன்றாய்
  இருக்குமெல் லாருக்குமென் றோது - மிக
  இழிந்துயர் குலங்களாய்
  இருபாலுங் கூடி வாழ இசையும் - இல்லை வசையும்.

30. தமிழ்ப் பண்டிதர்களே தமிழுக்கு அதிகாரிகள்

இராகம் - இங்கிலீஷ் தாளம் - ஒற்றை

   1. பண்டிதர் மட்டுமே பலமாகக் கத்துவர்
  என்றுரை மந்திரி ஏளனஞ் செய்குவர்
  பண்டிதரும் பாதுகாவாவிடின்
  சென்றுவிடும் செந்தமிழ்
  பார்ப்பன ரிற்பலர் பற்றுவிட்டார்
  காங்கிரசா ரெல்லாம் கைவிட்டனர்
  பாமரர் கண் அற்றவர்