பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 31

உரைப்பாட்டு

 
   
   குடிகளுக்குத் தெரியாத பாஷையிலே கொண்டுசெலுத்துமரசு  

கொடுமை யாகுமன்றோ

 
   அடிகளுக்குப் பயந்தளிக்கும் ஆதரவும் அடிமைத்தன மாகுமன்றோ  
   

ப.

 
   
   எழுத்தே யறியாமக்கள் இருந்தார் அறியாமைக்குள்  
   இன்னவரை அதிகாரத்தில் இசையச் செய்வதோ  
   இசையச் செய்வதோ பெருவசையைப் பெய்வதோ  
   

உரைப்பாட்டு

 
   
   ஓரிடத்தில் தாய்ப்பாஷையில் ஓரிடத்தில் அயற்பாஷையில் ஓர்  

அரசுநடப்பின் ஈடுவாமோ.

 
   மாரிடத்திலே தாயும் பாலொழுகி ஒரு பக்கம் நீர் ஒழுகத்தான்மனம்  

ஆமோ.

(தாய்)

 

33. இந்தியாவில் ஆறு மாகாணங்களில்
இந்திப் பேச்சின்மை

'ஜோர் ஜோர் ஜோர்' என்ற மெட்டு

   1. பாரத தேசமுற்றும் பதின்மூன்றாம் மாகாணங்கள்
  ஆறுமா காணம்இந்தி அறைவதில்லை காணுங்கள்
   
   2. இந்தியில்லா மாகாணம் ஏனைய இந்திப் பேச்சில்லை
  வங்காள நாட்டில் இந்தி வையார் இவ்யுகத் தெல்லை.
   
   3. சென்னை மாகாணத்தில்தான் செலுத்துவார் இந்திஅமுல்
  என்ன பேதைகளாக இருக்கின்றார் இந்நாட்டவர்.

34. தமிழனைத் தட்டியெழுப்பல்

'கழுகுமலையின் கந்தவேளே' என்ற மெட்டு

   தனையேதான் கெடுத்து விழாது  
   தமிழாளன் விழிப்ப தெப்போது  
   மனையே பற்றியெரியும் போது  
   மடிந்தே உறங்குவதொண் ணாது

(தனையே)